Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»மாநில அரசின் உதவித் தொகை பெறும் ஆதிதிராவிட மாணவர்கள் ‘என்எம்எம்எஸ்’ ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் தவிப்பு
    கல்வி

    மாநில அரசின் உதவித் தொகை பெறும் ஆதிதிராவிட மாணவர்கள் ‘என்எம்எம்எஸ்’ ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் தவிப்பு

    adminBy adminAugust 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மாநில அரசின் உதவித் தொகை பெறும் ஆதிதிராவிட மாணவர்கள் ‘என்எம்எம்எஸ்’ ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் தவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள் மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதால், மத்திய அரசின் என்எம்எம்எஸ் உதவித் தொகையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் சில பள்ளிகளுக்கு இன்னும் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று புகார்கள் உள்ளன.

    இதற்கிடையில், மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில் (என்எம்எம்எஸ்) தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் தற்போது மாநில அரசின் (ஸ்காலர்ஷிப்) கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் என்எம்எம்எஸ் உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர்.

    இதுகுறித்து ஆதிதிராவிட மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: மாநில அரசு சார்பில் ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் என்எம்எம்எஸ் எனும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    ஏற்கெனவே உதவித்தொகை பெறுபவர்கள் இத்திட்டத்தின்கீழ் உள்ள போர்ட்டலில் நுழைய முடியவில்லை. இதில் அதிகபட்சமாக மாநில அரசு ஆண்டுக்கு ரூ.3,500 வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்குகிறது. இதில் ஏற்கெனவே மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதால் மத்திய அரசின் திட்டத்தை பெற போர்ட்டலில் விண்ணப்பிக்க முடியவில்லை.

    எனவே மத்திய அரசின் என்எம்எம்எஸ் திட்டத்தில் உதவித்தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இந்தப் பிரச்சினை உள்ளது. மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெறும் ஆதிதிராவிட மாணவர்கள், மத்திய அரசின் என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் ஆதார் எண் மூலம் அந்த போர்ட்டலில் விண்ணப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளனர், என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2,000 பேருக்கு டேட்டா சயின்ஸ் பயிற்சி: சென்னை ஐஐடி சிறப்பு திட்டம்

    December 3, 2025
    கல்வி

    விடுமுறை நாட்களில் தேர்வுப் பணி; மாற்று விடுப்பு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    நாளை முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: தேர்வை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

    December 3, 2025
    கல்வி

    இளம் வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் அறிவுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு 

    December 3, 2025
    கல்வி

    பள்ளி வாகனங்கள் மூலம் படிப்பை வசமாக்கிய பழங்குடியினர் நலத்துறை!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்ய இது மிகவும் பயனுள்ள முறையாகும்; இல்லை அது சோப்பு நீர் அல்ல! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த அரிய இமயமலைப் பூ நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகக் கூறப்படுகிறது – புனிதமான பிரம்ம கமலத்தை வீட்டில் வளர்க்கலாமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சேலை-குறியிடப்பட்ட ஆடையா? டெய்னா டெய்லரின் கோல்டன் குளோப்ஸ் தோற்றம் தேசி ஃபேஷன் விவாதத்தைத் தூண்டுகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ISRO’s PSLV-C62 mission: Anvesha உளவு செயற்கைக்கோள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய உண்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சஞ்சீவ் கபூர் காதல் கதை: பிரபல சமையல்காரர் சஞ்சீவ் கபூர் தனது மனைவி அலியோனா கபூரை ரயில் பயணத்தில் சந்தித்தது எப்படி: அவர்களின் காதல் கதை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.