Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»மாணவர் வருகைப் பதிவேட்டில் சாதி விவரம் கூடாது: அரசின் வழிகாட்டுதல்கள் என்னென்ன?
    கல்வி

    மாணவர் வருகைப் பதிவேட்டில் சாதி விவரம் கூடாது: அரசின் வழிகாட்டுதல்கள் என்னென்ன?

    adminBy adminJune 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மாணவர் வருகைப் பதிவேட்டில் சாதி விவரம் கூடாது: அரசின் வழிகாட்டுதல்கள் என்னென்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் சாதி குறித்த விவரங்கள் இடம்பெறக் கூடாது என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் கொண்ட பள்ளிகளில் சாதிய வன்முறைகள் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்களிடம் சாதிய மற்றும் சமூக வேறுபாடுகள் உணர்வுகள் அடிப்படையில் வன்முறைகள் உருவாகுவதைத் தவிர்ப்பதும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதும் மிகவும் இன்றிமையாததது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன.

    அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளை மையமாக கொண்டு நன்னெறி வகுப்புகள் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும். இதுதவிர இலக்கியம், வினாடி வினா, நூலகம், வானவில் மன்றம் உள்ளிட்ட மன்றங்களில் மாணவர்கள் பங்கேற்க வழிசெய்ய வேண்டும். நாடகம், இசை, நடனம் உட்பட கல்விச் சாரா செயல்பாடுகளிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

    வகுப்பறையில் மாணவர்களை 15 நாட்களுக்கு ஒருமுறை வரிசை மாற்றி அமரவைக்க வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான விவரங்கள் இடம்பெறக்கூடாது. மாணவர்களின் சாதியை குறிப்பிட்டு ஆசிரியர்கள் அழைப்பதோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது. மேலும், மாணவர்களின் உதவித்தொகை குறித்த விவரங்களை வகுப்பறைகளில் அறிவிக்கக்கூடாது.

    அதேபோல், மாணவர்கள் தங்கள் கைகளில் வேறுபாடுகளை அடையாளப்படுத்தக்கூடிய வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிவதற்கு தடை விதிப்பதுடன், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க அவர்களின் பெற்றோர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதனுடன். மாணவர்களுக்கு பள்ளியளவில் வழிகாட்டி ஆசிரியரை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் தலைமையாசிரியர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், 1 எஸ்எம்சி குழு உறுப்பினர் மற்றும் 1 பணியாளரை கொண்ட மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும்.

    முக்கியமாக பாலியல் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வந்தால் காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிப்பதுடன், உடற்கல்வி பாடவேளைகளில் கட்டாயம் மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதை உறுதிசெய்ய வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களை கொண்ட மகிழ் முற்றம் குழுக்களை அமைக்க வேண்டும்.

    பள்ளிகளில் சாதிய பிரச்னைகளை கண்காணிக்க மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்பன உட்பட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக பின்பற்றி பள்ளிகளில்ய சாதி வன்முறைகள் நிகழ்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

    July 29, 2025
    கல்வி

    கல்வி உதவித் தொகை பெறுவதற்கான என்​எம்​எம்​எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை விரைந்து பதிய உத்தரவு

    July 28, 2025
    கல்வி

    அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய குறும்படங்கள் ஒளிபரப்பு: பள்ளிக் கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

    July 28, 2025
    கல்வி

    டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் அழைப்பு

    July 28, 2025
    கல்வி

    5 ஐஐடி-களில் புதிதாக 1,300 இடங்கள்

    July 28, 2025
    கல்வி

    ஆபரேஷன் சிந்தூர், ஷுபான்ஷு ஷுக்லா பற்றி பாடம்: என்சிஇஆர்டி.க்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘தனியார் பள்ளிக்கு வெறும் ரூ.1 வாடகைக்கு மதுரை மாநகராட்சியின் 2 ஏக்கர் இடம்’ – துணை மேயர் ‘பகீர்’
    • உங்கள் முகப்பரு உண்மையில் ஒரு பூஞ்சை தொற்று என்பதை எப்படி அறிவது: பூஞ்சை முகப்பரு என்றால் என்ன, அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் பல | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி விளக்கம்
    • முட்டைகளை சாப்பிடுவது மோசமான கொழுப்பைக் குறைக்கலாம், பழைய நம்பிக்கைக்கு மாறாக, புதிய ஆய்வைக் காணலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த் – தேதியை மாற்ற போலீஸார் ஆலோசனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.