Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»மாணவர் சேர்க்கை இல்லை என்று கூறி 207 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவதா? – அன்புமணி கண்டனம்
    கல்வி

    மாணவர் சேர்க்கை இல்லை என்று கூறி 207 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவதா? – அன்புமணி கண்டனம்

    adminBy adminAugust 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மாணவர் சேர்க்கை இல்லை என்று கூறி 207 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவதா? – அன்புமணி கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் 35 மாவட்டங்களைச் சேர்ந்த 207 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் கூட இல்லை என்று கூறி, அப்பள்ளிகளை திமுக அரசு மூடி வருவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 35 மாவட்டங்களைச் சேர்ந்த 207 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் கூட இல்லை என்று கூறி, அப்பள்ளிகளை திமுக அரசு மூடி வருவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, பள்ளிகளின் கல்வித்தரத்தை வீழ்ச்சியடையச் செய்து அவற்றுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

    கடந்த சில பத்தாண்டுகளாகவே தனியார் பள்ளிகள் எண்ணிக்கையிலும், மாணவர் சேர்க்கையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதிலும், அதனால் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என்பதிலும் ஐயமில்லை.

    இப்போது மொத்தமுள்ள 37,554 அரசு பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் மட்டுமே பயின்று வரும் நிலையில், அதைவிட அதிகமாக 12,970 தனியார் பள்ளிகளில் 63.42 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலை உருவாகியுள்ளது. பல தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்ற நிலையும், பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயிலும் நிலைமையும் ஏற்பட்டிருப்பது உண்மை தான்.

    ஆனால், இதற்கான தீர்வு அரசு பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பது தானே தவிர, பள்ளிகளை மூடுவது அல்ல. தொடக்கக் கல்வித்துறை சார்பில் 22,831 தொடக்கப் பள்ளிகளும், 6,587 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரே ஒரு பிரிவு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 851 வகுப்பறைகள் இருக்க வேண்டும்.

    ஆனால், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெறும் 65,000 மட்டும் தான். இதனால், ஒரு லட்சத்திற்கும் கூடுதலான வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இத்தகைய சூழலில், அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு சேர்ப்பார்கள்?

    அரசு பள்ளிகளில் மாணவர்களே இல்லாவிட்டாலும் கூட, அந்தப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமித்து, அது குறித்து உள்ளூர் மக்களிடம் பரப்புரை செய்து மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மாணவர்கள் இல்லை என்று கூறி பள்ளிகளை மூடிவிடக் கூடாது. இது அனைத்து மக்களுக்கும் அவர்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகளை அமைத்து இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டக் கடமையை நிறைவேற்றத் தவறும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது.

    திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு பள்ளிகள், கல்லூரிகளை சீரழித்து வருகிறது. தமிழ்நாடு எப்போதுமே கூடுதல் பள்ளிகளைத் திறந்தவர்களைத் தான் கொண்டாடி வருகிறதே தவிர, மூடியவர்களை அல்ல. இதை உணர்ந்து மூடப்பட்டு வரும் 207 பள்ளிகளையும் தொடர்ந்து நடத்தி, அங்கு கூடுதல் ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திமுக அரசுக்கு தமிழக மக்கள் மூடுவிழா நடத்துவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு `தமிழர் தொழில்நுட்பம், தமிழர் மரபு’ வினாத்தாள் தொகுப்பு வெளியீடு

    December 1, 2025
    கல்வி

    மார்க்கெட்டிங் துறையில் பணியாற்ற… | வெற்றி உங்கள் கையில்

    December 1, 2025
    கல்வி

    பால்வள ஆராய்ச்சியில் மறுமலர்ச்சி எப்போது? வேலைன்னு வந்துட்டா… | அத்தியாயம் 5

    December 1, 2025
    கல்வி

    புதிய பாடத்திட்ட வடிவமைப்பு வல்லுநர் குழுவில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

    December 1, 2025
    கல்வி

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்க அனுமதி: பள்ளிக்கல்வித் துறை அரசாணை

    December 1, 2025
    கல்வி

    ஆசிரியர்கள் பற்றாக்குறை: புதுவையில் பெற்றோருடன் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நவ.19, 20-ல் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து டெல்லிக்கு 200 விவசாயிகள் பயணம்
    • ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்
    • காலை ஸ்மூத்தி முதல் வீட்டில் புத்தா கிண்ணம் வரை, புதிதாக திருமணமான சமந்தா ரூத் பிரபுவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய 7 உணவுப் பாடங்கள்
    • நயா தீவு என்றால் என்ன, இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான லக்ஷ்மி மிட்டல் இங்கிலாந்தில் இருந்து ஏன் அங்கு மாறுகிறார்? | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.