Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»மனநலமும் சமூகக் களங்கமும் | மனதின் ஓசை 20
    கல்வி

    மனநலமும் சமூகக் களங்கமும் | மனதின் ஓசை 20

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மனநலமும் சமூகக் களங்கமும் | மனதின் ஓசை 20
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மனநலப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டவர் மீது காட்டப்படும் எதிர்மறை மனப்பான்மை, கற்பிதங்கள், தவறான கருத்துகள் ஆகியவை ‘சமூகக் களங்கம்’ (social stigma) எனப்படுகிறது. இது பாகு பாட்டுக்கு வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்டவர் உதவி நாடுவதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் தடையாக இருக்கிறது. இதனால் பாதிக்கப் பட்டவர் மட்டுமல்லாது அவரைச் சார்ந்த வர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    உரையாடல் வேண்டும்: இந்தக் காலத்தில் கல்வியில், விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதைத் தாண்டி சமூக ஊடகங்களில், டிஜிட்டல் தளங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதில் ஒருவர் சிறந்து விளங்க வேண்டு மென்கிற கட்டாயத்துக்கு இளம் வயதினர் தள்ளப்படுகின்றனர்.

    பள்ளி, கல்லூரி வயதைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இந்த அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். தன் வயதைச் சேர்ந்த ஒருவரால் முடியும்போது, நம்மால் ஏன் முடியவில்லை என்கிற கேள்வி ஒரு மாணவருக்கு எழலாம். அதை வெளியே சொல்ல முடியாமல் தனக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் மன அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியமே அதிகம்.

    ஒருவேளை தன்னுடைய தயக்கத்தை விலக்கி ஒருவர் பகிர்ந்துகொள்கிறார் எனும்போது, அவரை இன்னொருவரோடு ஒப்பிட்டுப் பேசாமல், கிண்டல் செய்யாமல் இருக்க வேண்டும். இது பெற்றோர், ஆசிரியர், நண்பர்களின் கடமை. மனநலப் பிரச்சினையால் பாதிக்கப் பட்ட பெரும்பாலானோர் தன்னுடைய பிரச்சி னையை இன்னொருவர் எப்படி அணுகுவார் என்கிற தயக்கத்தினாலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்து விடுகிறார் கள். தெரிந்தோ தெரியாமலோ ஒருவரின் மனப் போராட்டத்துக்குச் ‘சமூகக் களங்கம்’ ஏற்படுத்துபவரும் காரணமாகிறார்.

    எனவே, இளம் தலைமுறையினர் மனநலம் சார்ந்த அறிவியல்ரீதியான கருத்துகளைப் பற்றித் தெரிந்துகொண்டு நண்பர்களோடும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் உரையாடலைத் தொடங்க வேண்டும், அதைப் பரவலாக்க வேண்டும். இதன் மூலம் சமூகக் களங்கம் ஏற்படுத்தும் சவால்களைப் பற்றிப் பொது வெளியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

    மீண்டுவர முடியும்: வேலைக்குச் செல்லும்போது பொருளாதார நெருக்கடி, பணியிடம் சார்ந்த நெருக்கடிகள் ஆகியவை ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படா மல் இருக்கும் காலக்கட்டமே கிடையாதா எனக் குழம்பிப்போக வேண்டாம். மனநலச் சிக்கல் ஏற்படுவதற்குத் தனி ஒருவர் மட்டுமே காரணமாகிவிட முடியாது. தனிமனிதர் ஒருவர் மனநலத்தோடு இருப்பதற்கும் பாதிக்கப்படுவதற்கும் சமூகத்தின் பங்கு பெரியது. மனக் கவலை, மனப்பதற்றம், வாழ்க்கை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் உள்ளிட்ட மனநல பாதிப்புக்கான அறி குறிகள் தொடர்ந்து இருக்கும்போது, தயங்காமல் மனநல மருத்துவரை நாட வேண்டும்.

    மனநலப் பிரச்சினைகளில் இருந்து மீண்டுவர முறையான – அறிவியல் பூர்வமான மருத்துவச் சிகிச்சை முறைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர் எவ்விதத்தயக்கமும் இல்லாமல் அருகில் உள்ள பொது மருத்துவரையோ குடும்ப மருத்துவரையோ அல்லது மனநல மருத்துவரையோ சந்தித்து தங்களுடைய மனநலப் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்டு சிகிச்சையைப் பெறலாம். பாதிக்கப்பட்ட ஒருவரை உங்களது நட்பு வட்டத்திலோ, கல்லூரியிலோ, பணி இடத்திலோ பார்க்க நேரிட்டால் அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முயற்சி செய்யலாம்.

    தவறான நம்பிக்கைகள் காரணமாக அறிவியலுக்குப் புறம்பான வழிகளைப் பின்பற்றி பிரச்சினையின் தீவிரத்தை அதிகரித்து விடாமல், இதர உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவரீதியான சிகிச்சையை அணுகுவது போல மனநலப் பிரச்சினைகளுக்கும் மனநல மருத்துவர்களை அணுகி, உரிய சிகிச்சை மூலம் முழுமையாக மீண்டுவரலாம்!

    (நிறைந்தது)

    – addlifetoyearz@gmail.com



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் முன்னேற்றம் எப்படி? – ஆய்வுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவு

    August 2, 2025
    கல்வி

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ தேர்வுக்காக 236 பயிற்சி மையங்கள்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

    August 2, 2025
    கல்வி

    தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4,00,000-ஐ எட்டி சாதனை!

    August 1, 2025
    கல்வி

    அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

    August 1, 2025
    கல்வி

    டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: ஆன்லைனில் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் – பள்ளிக்கல்வி துறை

    July 31, 2025
    கல்வி

    எந்த வேலைக்கு எந்த வண்ணம்?

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • படிக்கும்போதே விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்: ஐஐடி மாநாட்டில் அண்ணாமலை வலியுறுத்தல்
    • ஆண்களில் காணப்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் எச்சரிக்கை அறிகுறிகள்
    • ​​​​​​​துரோகம் செய்ததாக வைகோ குற்றச்சாட்டு: நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்
    • தமிழகத்தில் நடப்பது பழனிசாமிக்கு தெரியவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்
    • ​​​​​​​மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த ஓபிஎஸ் திட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.