தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் ஜெய்க்கா நிதி நிறுவனத்தின் 85 சதவீத நிதி உதவியும், 15 சதவீதம் மத்திய அரசும் நிதி ஒதுக்கியது. 2019 ஜனவரி 27-ல் பிரதமர், அப்போதைய முதல்வர் பழனிசாமி, எம்.பி தேர்தலை மனதில் வைத்து அடிக்கல் நாட்டினர். 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதி வரை எதுவுமே செய்யவில்லை. திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான 222 ஏக்கர் நிலத்தை ஆதாரபூர்வமாக வழங்கியது. தொடர்ந்து தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து வலியுறுத்தினார். இதற்கிடையில் 2022-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு 50 மாணவர்கள் சேர்ந்தனர்.
தமிழக முதல்வர் மறுத்திருந்தால் எய்ம்ஸ் வராமல் போயிருக்கும். எனவே ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அந்த மாணவர்கள் படிக்க தமிழக முதல்வர் அனுமதி வழங்கினார். தற்போது வரை 4 ஆண்டுகளில் 200 எய்ம்ஸ் மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், இன்னும் எய்ம்ஸ் கட்டி முடிக்கவில்லை. இன்னும் ஓராண்டு முடிந்தால் எய்ம்ஸ் மாணவர்கள் கல்லூரியை பார்க்காமலே டிகிரி வாங்கி சென்றுவிடுவர்.

