Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»மதுரையில் ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் அரசு தொடக்க பள்ளி!
    கல்வி

    மதுரையில் ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் அரசு தொடக்க பள்ளி!

    adminBy adminJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரையில் ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் அரசு தொடக்க பள்ளி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டி.கல்லுப்பட்டி அருகே கரையாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஓர் மாணவர் மட்டுமே படிக்கிறார். அவருக்கு ஓர் ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஒன்றியம் மோதகம் ஊராட்சிக்குட்பட்ட எம்.கரையாம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஓக் மாணவர் மட்டுமே உள்ளார். இந்த ஒரே ஒரு மாணவருக்காக ஓர் ஆசிரியர் மாற்றுப் பள்ளியிலிருந்து இடமாறுதலில் வந்துள்ளார்.

    கடந்த ஆண்டு இந்த மாணவர் டி.கல்லுப்பட்டியில் உள்ள பள்ளிக்கு படிக்கச் சென்றதால், எம்.கரையாம்பட்டியில் உள்ள பள்ளி மூடப்பட்டது. தற்போது அந்த மாணவர் மீண்டும் கரையாம்பட்டி பள்ளியில் சேர்ந்துள்ளதால் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பள்ளிக்குச் சென்ற ஆசிரியரும் மீண்டும் பணியிட மாறுதலில் கரையாம்பட்டிக்கு வந்துள்ளார். இந்த ஒரு மாணவருக்கு மதிய உணவு சிட்டுலொட்டிபட்டி பள்ளியிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

    இதேபோல், பேரையூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சியிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படிக்கின்றனர். தெய்வநாயகபுரம், லட்சுமிபுரம், புதூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் 5 முதல் 9 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இவர்களுக்குரிய மதிய உணவு அருகிலுள்ள பள்ளிகளிலிருந்து வரவழைக்கப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரலிங்காபுரம், பி.அம்மாபட்டி ஆகிய ஊர்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பள்ளிகள் மூடப்பட்டன. அதேபோன்ற நிலை தற்போது ஒற்றை இலக்கத்தில் செயல்படும் பள்ளிகளுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    இதுகுறித்து கரையாம்பட்டி கிராமத்தினர் கூறுகையில், தமிழக அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அரசுப் பள்ளிகள் தேர்தல் காலங்களில் வாக்குச்சாவடியாக செயல்படுகிறது. அதற்காக ஒரு சில மாணவர்களை சேர்த்து பள்ளியை மூடவிடாமல் பாதுகாத்து வருகிறோம் என்றனர்.

    இது குறித்து திருமங்கலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன் கூறுகையில், கரையாம்பட்டி பள்ளியின் நிலை குறித்து தெரியவில்லை, சேடபட்டி பகுதிக்கு ஆய்வுக்கு செல்கிறேன். பள்ளியின் நிலை குறித்து, அங்கு ஆய்வு செய்த பிறகு தெரிவிக்கிறேன் என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    கனவு நிறைவேறுமா? – நாளை அப்துல் கலாமின் 10-வது நினைவு தினம்!

    July 26, 2025
    கல்வி

    பொறியியல் சேர்க்கை 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

    July 26, 2025
    கல்வி

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது: தரவரிசையில் நெல்லை மாணவர் முதல் இடம்

    July 26, 2025
    கல்வி

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!

    July 25, 2025
    கல்வி

    பள்ளி மாணவர்கள் கணினி, ஏஐ பயில ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    July 25, 2025
    கல்வி

    மாநில தகுதி தேர்வுக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம்

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘தலைவன் தலைவி’ வசூல் அதிகரிப்பு: படக்குழுவினர் மகிழ்ச்சி
    • பிரதமர் மோடி செல்லும் இடங்களில் காங். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை தகவல்
    • ‘புஷ்பா 2’ பற்றி நெகட்டிவாக பேசினாரா ஃபகத் பாசில்?
    • “அரசு ஊழியர் நலனில் பின்தங்கிய நிலையில் தமிழகம்” – பழைய ஓய்வூதிய திட்ட இயக்க தேசிய தலைவர் பேச்சு
    • ராமநாதபுரம் சமஸ்தான சொத்துகள் விற்கப்படுவதாக புகார் – போலீஸ் விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.