Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்
    கல்வி

    போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

    adminBy adminAugust 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​போதைப் பொருள் பயன்​பாடு​களை தடுத்​து, போதை​யில்லா தமிழகத்தை உரு​வாக்க அனை​வரும் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என, அமைச்​சர் அன்​பில் மகேஸ் வலி​யுறுத்​தி​னார். தமிழகத்​தில் 13,903 உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்ளி​களில், போதை எதிர்ப்பு மன்​றங்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இந்த மன்​றங்​களில் உள்ள மாணவர்​கள் பல்​வேறு நிகழ்வுகளிலும் ஓவியப் போட்​டிகள் மற்​றும் சுவரொட்​டிகள் மூலம் போதை எதிர்ப்பு விழிப்​புணர்வு சார்ந்த புத்​தாக்க பயிற்சிகளில் பங்​கேற்று வரு​கின்​றனர்.

    இந்​நிலை​யில், அரசுப் பள்​ளி​களில் பயிலும் 9 முதல் 12-ம் மாணவர்​களிடம் வாழ்​வியல் திறன்​களு​டன் அவர்​களின் பன்​முகத் திறன்ககளை வெளிப்​படுத்​து​வதற்​கான கலைப் பட்​டறையை பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ், சென்​னை​யில் நேற்று தொடங்கி வைத்​தார். அதைத் தொடர்ந்​து, போதை​யில்லா தமிழகம் எனும் தலைப்​பில் மாணவர்​கள் வரைந்த ஓவி​யங்​களை அமைச்​சர் மகேஸ் பார்​வை​யிட்​டார். அதில் சிறந்த ஒவி​யங்​களை வரைந்த மாணவர்​களுக்கு சான்​றிதழ்​கள் வழங்​கி​னார்.

    நிகழ்ச்​சி​யில், அமைச்​சர் அன்​பில் மகேஸ் பேசி​ய​தாவது: பள்ளி மாணவர்​களிடம் போதைப் பொருள்​கள் பயன்​பாட்டை தடுப்​ப​தற்​காக, பல்​வேறு முன்​னெடுப்​பு​களை பள்​ளிக் கல்​வித் துறை மேற்​கொண்டு வரு​கிறது. அதன் ஒருபகு​தி​யாக, மாணவர்​களிடையே போதைக்கு எதி​ரான சிந்​தனையை உரு​வாக்க ஓவியப் போட்டி கலைப்​பட்​டறை என்ற பெயரில் நடத்​தப்​பட்​டுள்​ளது.

    தொடர்ந்து, அனைத்து பள்​ளி​களி​லுள்ள போதை எதிர்ப்பு மன்ற ஒருங்​கிணைப்​பாளர்​களுக்​கும் பயிற்சி வழங்கி மாணவர்​களுக்கு கலைப்​பட்​டறை செயல்​பாடு​கள் செயல்​படுத்​தப்​பட​வுள்​ளது. வாழ்​வியல் திறன் உள்​ளிட்ட பயிற்​சிகளுக்கு அரசின் சார்​பில் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்​கப்​பட்டு உள்ளது.

    போதை​யில்லா தமிழகத்தை உரு​வாக்க காவல் துறை மட்​டும் நடவடிக்கை மேற்​கொண்​டால் போதாது. அவர்​களு​டன் மாணவர்கள், பொது​மக்​கள் என அனை​வரும் ஒருங்​கிணைந்து விழிப்​புணர்வு உள்​ளிட்ட பல்​வேறு செயல்​பாடு​களில் ஈடுபட வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார். இந்​நிகழ்ச்​சி​யில், பள்​ளிக் கல்வி இயக்​குநர் ச.கண்​ணப்​பன், தேர்​வுத் துறை இயக்​குநர் கே.சசிகலா உள்​ளிட்​டோர் கலந்​துக் கொண்​டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    குரூப்-2 தேர்வுக்கு செப்.23-ல் 3-வது கட்ட கலந்தாய்வு

    September 14, 2025
    கல்வி

    டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு: யுஜிசி உத்தரவு

    September 14, 2025
    கல்வி

    ‘டெட்’ தேர்வுக்கு தடையில்லாச் சான்று பெற தேவையில்லை: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தல்

    September 13, 2025
    கல்வி

    கண்ணங்குடி அரசு பள்ளியை சிறப்பாக மாற்றிய தலைமை ஆசிரியருக்கு குவியும் விருதுகள்!

    September 13, 2025
    கல்வி

    டெட் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்

    September 13, 2025
    கல்வி

    அரசுப் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வில் திறன் இயக்க மாணவர்களுக்கு தனி வினாத்தாள்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தேசிய லோக் – அதாலத் மூலம் ரூ.719 கோடி இழப்பீடு: ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு
    • பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி
    • குரூப்-2 தேர்வுக்கு செப்.23-ல் 3-வது கட்ட கலந்தாய்வு
    • அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை: இபிஎஸ் விமர்சனம்
    • ஆப்டிகல் மாயை: 82 களில் மறைக்கப்பட்ட 28 ஐ 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.