
என் பெயர் கவ்யா ஸ்ரீ. நான் சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் முதல்வன் நிரல் திருவிழா திட்டத்தின் மூலம் ஒரு புதுமையான படைப்பை உருவாக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குழு தமிழ்நாட்டின் கோயில்களை விஆர் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் அனுபவமாக மாற்றும் திட்டத்தை உருவாக்கினோம்.
இந்த திட்டத்தின் நோக்கம் – வரலாற்று சிறப்புமிக்க கோயில்களையும் பாரம்பரிய கட்டிடங்களையும் 3டி வடிவில் காட்சிப்படுத்தி, அவற்றை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அனுபவமாக வழங்குவது. இதற்காக Gaussian Sampling மற்றும் Polycam போன்ற நவீன 3டி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒவ்வொரு கட்டிட வடிவமைப்பும் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோயிலின் இயல்பான ஒலி சூழல், பல மொழிகளில் வழிகாட்டும் ஏஐ தொழில்நுட்பம், வரலாற்று தகவல்களை வழங்கும் இன்டராக்டிவ் பேனல்கள் என பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

