Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, October 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»போக்குவரத்து விதிகளை மாணவர்கள் மதிக்க வேண்டும்: தோல் ஏற்றுமதி குழும மேலாண் இயக்குநர் அறிவுரை
    கல்வி

    போக்குவரத்து விதிகளை மாணவர்கள் மதிக்க வேண்டும்: தோல் ஏற்றுமதி குழும மேலாண் இயக்குநர் அறிவுரை

    adminBy adminOctober 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போக்குவரத்து விதிகளை மாணவர்கள் மதிக்க வேண்டும்: தோல் ஏற்றுமதி குழும மேலாண் இயக்குநர் அறிவுரை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘​மாணவர்​கள் போக்​கு​வரத்து விதி​களை மதிக்க வேண்​டும். விதி மீறலால் உயி​ரிழப்​பு, பொருளா​தார இழப்பு ஏற்படுகிறது’ என்று தோல் ஏற்​றுமதி குழும மேலாண் இயக்​குநர் இரா.செல்​வம் அறி​வுறுத்தி உள்​ளார். சென்னை வியாசர்​பாடி மல்​லிகைப்பூ காலனி​யில் பிறந்​தவர் ராணுவ விஞ்​ஞானி டில்​லி​பாபு.

    இவர் தனது இல்​லத்​தில் பள்​ளி, கல்​லூரி மாணவ, மாண​வியர்​களுக்​கான ‘கலாம் சபா’ என்ற நூல​கம் மற்​றும் வழி​காட்டி மையத்தை நிறு​வி​யுள்​ளார். இதை விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை கடந்த ஆண்டு திறந்​து​வைத்​தார்.

    ‘கலாம் சபா’ நூல​கம் சார்​பில் மாதாந்​திர வழி​காட்டி கூட்​டத்​தொடரை​யும் டில்​லி​பாபு நடத்தி வரு​கிறார். அதில் சிறந்த ஆளு​மை​கள் வரவழைக்​கப்​பட்​டு, அவர்​களு​டன் கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நடத்​தப்​படு​கிறது. அதன் 8-வது நிகழ்​வாக அக்​.1-ம் தேதி ‘ஹார்​வர்டு நாட்​கள்’ என்ற தலைப்​பில் கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

    இதில், தோல் ஏற்​றுமதி குழு மேலாண் இயக்​குநர் இரா.செல்​வம் பங்​கேற்​று, அவர் எழு​திய ‘ஹார்​வர்டு நாட்​கள்’ நூலில் போக்​கு​வரத்து விதி​மீறல் குறித்து எழு​தி​யது தொடர்​பாக விஞ்​ஞானி டில்​லி​பாபு எழுப்​பிய கேள்வி​களுக்கு பதில் அளித்து பேசி​ய​தாவது: உலக நாடு​களில் வனப்​பகு​தி​யில் விலங்​கு​களைப் பாது​காப்​ப​தற்​காக வாக​னங்​களை வனக் காவலர்​கள் தடுத்து நிறுத்​து​வார்​கள்.

    ஆனால் இந்​தி​யா​வில்​தான் மக்​களைப் பாது​காப்​ப​தற்​காக, வாக​னங்​களை தடுத்து நிறுத்​தும் சூழல் நில​வு​கிறது. விதி மீறலால் உலக அளவில் ஏற்​படும் 10 மரணங்​களில் ஒரு மரணம் இந்​தி​யா​வில் நிகழ்​கிறது. எனவே, மாணவர்​கள் போக்​கு​வரத்து விதி​களை மதிக்க வேண்​டும். போக்​கு​வரத்து விதி​மீறலால் உயி​ரிழப்​பும், பொருளா​தார இழப்​பும் ஏற்​படு​கிறது.

    கல்​வி, திறமை, அறிவை வளர்ப்​ப​தில்​தான் முந்தி செல்ல முயல வேண்​டும். போக்​கு​வரத்து விதி​களை மதிக்க வேண்​டும் என்ற உணர்​வு, மற்​றவர் நிர்​பந்​திக்​காமல் உங்​களுக்​குள் எழ வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் டில்​லி​பாபு​வின் தந்​தை​யும், தொழிற்​சங்​க​வா​தி​யும், ‘மிஸ்​டர் மெட்​ராஸ்’ பட்​டம் வென்​றவரு​மான ச.விஜயகு​மார், ‘ஆளுமை சிற்​பி’ மாத இதழ் ஆசிரியர் மெ.​ஞான​சேகர் உள்​ளிட்​டோர் கலந்​துகொண்​டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தரநிலை அறிக்கை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    October 5, 2025
    கல்வி

    பெட்ட குறும்பர் பழங்குடியினத்தின் முதல் வழக்கறிஞர் கின்மாரி!

    October 4, 2025
    கல்வி

    மாணவர்களை வெற்றியாளர்களாக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம்

    October 3, 2025
    கல்வி

    விஜயதசமி நாளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ‘அ’ எழுதி  கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்

    October 3, 2025
    கல்வி

    மத்திய அரசு நிதி வழங்கியதை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் மீண்டும் இலவச மாணவர் சேர்க்கை

    October 3, 2025
    கல்வி

    மத்திய அரசு நிதி விடுவிப்பு: தனியார் பள்ளிகளில் மீண்டும் இலவச மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித் துறை

    October 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் நெரிசல் உயிரிழப்பு: சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு
    • 5 எளிய பழக்கவழக்கங்களுடன் அதிகப்படியான சுழற்சியை உடைக்கவும்
    • அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இஸ்கான் கோயிலில் ‘துடிப்பான’ துசெஹ்ரா கொண்டாட்டங்களுடன் இணைகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவுக்கு எதிராக பேசிய ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும்: பாஜக எம்.பி. நிஷிகாந்த் வலியுறுத்தல்
    • தலைமை பொறுப்பிலிருந்து ரோஹித் விடுவிப்பு: இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.