Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»புதுவையில் அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
    கல்வி

    புதுவையில் அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி

    adminBy adminJuly 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதுவையில் அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

    அரசு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி, மாணவர் நாள் விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியது: ”காமராஜர் ஊழலற்ற ஆட்சியை கொடுத்தார். கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். நாட்டின் அனைத்து தலைவர்களுக்கும் வழிகாட்டியாக வாழ்ந்தார்.

    காமராஜர் வழியில் புதுச்சேரியில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசு செயல்பட்டு வருகிறது. எத்தனையோ திட்டங்களை பிள்ளைகளுக்கு அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு பல சலுகைகளை வழங்குகிறது. கல்விக்காக அரசானது ஆண்டுக்கு ரூ.1,350 கோடியை ஒதுக்குகிறது. இதில் பள்ளிக் கல்விக்காக ரூ.950 கோடியை செலவிடுகிறது.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு படித்து வருகின்றனர். பிற படிப்புகளுக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும். லேப் டாப் வழங்கவில்லை என்ற குறை இருக்கின்றது. இன்னும் ஒரு மாதத்துக்குள் லேப் டாப் வழங்கப்படும். பள்ளி கல்வி மட்டுமின்றி உயர்கல்வி கொடுப்பதிலும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. எல்லோரும் படிக்க வேண்டும். அதற்கு அடிப்படை கல்வி. அந்த கல்வியை கொடுப்பது அரசின் கடமை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், உலகம் முழுவதும் செல்ல வேண்டும்.

    அதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கி தர வேண்டும். அதன் மூலம் பல விஞ்ஞானிகள், கண்டுபிடிப்புகள் வர வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். அதற்குரிய வாய்ப்புகளை நம்முடைய பிள்ளைகளுக்கு உருவாக்கி தர வேண்டும் என்பதும் நம்முடைய அரசின் எண்ணம். பள்ளி கல்வி சிறப்பாக இருந்தால் வாழ்க்கையில் உயர முடியும். பள்ளிகளில் மாணவர்களுக்கு சரலமாக பேசும் பழக்கம் வர வேண்டும் என்பதை அரசு உணர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. தேவையான கல்லூரிகளை கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    நல்ல நூல்களை படித்தால் நல்ல சிந்தனையாளராக வர முடியும். அதன்மூலம் மற்றவர்களுக்கு உதவ முடியும். எனவே பிள்ளைகள் நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக படித்த வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    எஸ்ஆர்எம் பல்கலை. நுழைவுத் தேர்வுகள்: இன்று இணையதளத்தில் விண்ணப்பங்கள் வெளியீடு

    December 1, 2025
    கல்வி

    கோவை மாணவி ரிதன்யா அசத்தல்: மாணவர்களுக்கு துணைபுரியும் இணையதளம் அறிமுகம்

    December 1, 2025
    கல்வி

    அரசுப் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

    December 1, 2025
    கல்வி

    நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களை நிர்பந்திக்கவில்லை: விமர்சனத்துக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் 

    December 1, 2025
    கல்வி

    திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

    December 1, 2025
    கல்வி

    திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஸ்டனில் விமானத்தின் நடுவே போர்க்கால் இரண்டு வாலிபர்களை குத்திய இந்திய மாணவர் மீது குற்றச்சாட்டு; 10 ஆண்டுகள் வரை, $250,000 அபராதம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதீனாவில் பேருந்து விபத்து: இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் – அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்!
    • எஸ்ஆர்எம் பல்கலை. நுழைவுத் தேர்வுகள்: இன்று இணையதளத்தில் விண்ணப்பங்கள் வெளியீடு
    • தமிழ்நாடு டி20 அணிக்கு வருண் சக்ரவர்த்தி கேப்டன்
    • அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் பெற்று இந்திய வம்சாவளி சிஇஓ மோசடி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.