Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»பிளஸ் 1 வகுப்​புக்​கான பொதுத்தேர்வு நிறைவு: தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளி​யீடு
    கல்வி

    பிளஸ் 1 வகுப்​புக்​கான பொதுத்தேர்வு நிறைவு: தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளி​யீடு

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிளஸ் 1 வகுப்​புக்​கான பொதுத்தேர்வு நிறைவு: தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளி​யீடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் நடைபெற்ற வேதியியல் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இறுதிநாளில் வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதில் வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘1, 2 மதிப்பெண் வினாக்களை தவிர 3, 5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டு இருந்தன. வழக்கமாக 2-ம் தொகுதி பாடப் புத்தகத்தில் இருந்து அதிகமாக வினாக்கள் கேட்கப்படாது. ஆனால், இந்த ஆண்டு அந்த பகுதியில் இருந்துதான் 3, 5 மதிப்பெண் வினாக்கள் வந்திருந்தன.

    இதனால் முழு மதிப்பெண் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை உயராது’’என்றனர். அதேபோல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் சற்று எளிதாக இருந்ததாக கூறப்பட்டது.

    இந்நிலையில் பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாக்களும் நடத்தப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 19 முதல் 30-ம் தேதி நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருத்துதல் பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதவிர பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 28) தொடங்குகிறது. இந்த தேர்வை 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வு நேரங்களில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதோடு, அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளி நிர்வாகத்தின் மையத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தொல்லியல் ஆராய்ச்சியில் இணையப் பாதுகாப்பு

    September 10, 2025
    கல்வி

    வளர்ந்து வரும் ஊட்டச்சத்து அறிவியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 20

    September 10, 2025
    கல்வி

    பள்ளி ஆசிரியர்களுக்கு `ஸ்வயம் பிளஸ்’ திட்டத்தின் மூலம் சென்னை ஐஐடி சார்பில் இலவச ஏஐ படிப்புகள்

    September 10, 2025
    கல்வி

    சாதிய எண்ணம் கொண்ட பள்ளி ஆசிரியர்களை மாற்ற நடவடிக்கை

    September 10, 2025
    கல்வி

    ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு: 3.80 லட்சம் பேர் விண்ணப்பம்; காலக்கெடு இன்று மாலை முடிவடைகிறது

    September 10, 2025
    கல்வி

    ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்
    • சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    • 30 மற்றும் 40 களில் உள்ளவர்களிடையே முழங்கால் வலி அதிகரித்து வருகிறது, ஆய்வு எச்சரிக்கைகள்: காரணங்கள் மற்றும் தடுப்பு என்பதை அறிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா விடாமுயற்சி ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஆமை வடிவ பாறையை கண்டுபிடித்து விசித்திரமான செவ்வாய் நிலப்பரப்புகளை முன்னிலைப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாயகனாக அறிமுகமாகும் பிக் பாஸ் விக்ரமன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.