Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து – அரியருடன் பிளஸ் 2 பயிலும் 20,000 மாணவர்களின் நிலை என்ன?
    கல்வி

    பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து – அரியருடன் பிளஸ் 2 பயிலும் 20,000 மாணவர்களின் நிலை என்ன?

    adminBy adminAugust 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து – அரியருடன் பிளஸ் 2 பயிலும் 20,000 மாணவர்களின் நிலை என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், பிளஸ் 1 பொதுத் தேர்வு நிகழாண்டு முதல் ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் நிகழாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் நடைபெறாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.

    இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 1-ல் அரியர் வைத்து, தற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. முந்தைய நடைமுறையின்படி, பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தாலும், மாணவர்கள் பிளஸ் 2-க்கு செல்ல அனுமதி இருந்தது. பின்னர், பிளஸ் 2 தேர்வுகளுடன் சேர்த்து பிளஸ் 1 அரியர் தேர்வுகளையும் எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    ஆனால், இந்த ஆண்டு முதலே பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த மார்ச்- ஏப்ரலில் நடைபெற்ற பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்த 20,000 மாணவர்களின், நிலை என்ன என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. தற்போது பிளஸ் 2 பயிலும் இவர்களின் பிளஸ் 1 அரியர் பாடங்கள் குறித்த இறுதித் தீர்வு என்ன என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்தப்படுமா அல்லது அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த விவகாரத்தில் தேர்வுத் துறை விரைவாக உரிய முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரியர் தேர்வு ரத்துக்கு அரசாணை: இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக திருச்சி மாவட்டத் தலைவர் பி.முருகன் கூறியது: தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கை வரவேற்கதக்கது. அதேவேளையில், தமிழகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 1 அரியருடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு அந்த அரியர் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக அரசாணை வெளியிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும். அப்போது தான் அந்த மாணவர்கள் நல்ல மனநிலையுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவார்கள் என்றார்.

    இதுகுறித்து கல்வித் துறை வட்டாரங்களிடம் விசாரித்தபோது, ‘மாநிலக் கல்விக் கொள்கையை தொடர்ந்து விரிவான நெறிமுறைகள் ஒருசில நாட்களில் வெளியிடப்படும். அதில் இதுதொடர்பாக அறிவிப்புகள் வெளியாகலாம் அல்லது தனி அரசாணை வெளியாகவும் வாய்ப்புள்ளது’ என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்

    December 1, 2025
    கல்வி

    10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்டவணை வெளியீடு: முதல்முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி

    December 1, 2025
    கல்வி

    பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு `தமிழர் தொழில்நுட்பம், தமிழர் மரபு’ வினாத்தாள் தொகுப்பு வெளியீடு

    December 1, 2025
    கல்வி

    மார்க்கெட்டிங் துறையில் பணியாற்ற… | வெற்றி உங்கள் கையில்

    December 1, 2025
    கல்வி

    பால்வள ஆராய்ச்சியில் மறுமலர்ச்சி எப்போது? வேலைன்னு வந்துட்டா… | அத்தியாயம் 5

    December 1, 2025
    கல்வி

    புதிய பாடத்திட்ட வடிவமைப்பு வல்லுநர் குழுவில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 22 வயதான இந்திய வம்சாவளி பொறியாளர் காற்றாலை ஆற்றல் கணிதத்தை மீண்டும் எழுதுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு!
    • 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்
    • 32 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி: இந்தியா-ஏ அணி அபார வெற்றி!
    • யார் இந்த ஜோரான் மம்தானி? – நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.