Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»​​​​​​​பாலிடெக்னிக் படிப்பில் கொள்குறி வகை வினா முறை: தொழில்நுட்பக் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் அச்சம்
    கல்வி

    ​​​​​​​பாலிடெக்னிக் படிப்பில் கொள்குறி வகை வினா முறை: தொழில்நுட்பக் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் அச்சம்

    adminBy adminAugust 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ​​​​​​​பாலிடெக்னிக் படிப்பில் கொள்குறி வகை வினா முறை: தொழில்நுட்பக் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் அச்சம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இந்​தக் கல்வி ஆண்டு முதல் பாலிடெக்​னிக் டிப்​ளமா படிப்​பில் கொள்​குறி வகை வினா முறையை அமல்​படுத்த தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம்

    முடிவு செய்​துள்​ளது. இதனால், தொழில்​நுட்​பக்​கல்​வி​யின் தரம் பெரிதும் பாதிக்​கப்​படும் என்று பாலிடெக்​னிக் கல்​லூரி ஆசிரியர்​கள் அச்​சம் தெரிவிக்​கின்​றனர்.

    தமிழகத்​தில் 54 அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களும் 400-க்​கும் மேற்​பட்ட தனி​யார் பாலிடெக்​னிக் கல்​லூரி​களும் இயங்கி வரு​கின்​றன. இக்​கல்​லூரி​களில் பொறி​யியல் பாடப்​பிரி​வில் 3 ஆண்டு கால டிப்​ளமா படிப்​பு​கள் வழங்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில் சிவில், மெக்​கானிக்​கல், எலெக்ட்​ரிக்​கல், எலெக்ட்​ரானிக்ஸ் மற்​றும் கம்​யூனிகேஷன், கம்ப்​யூட்​டர் சயின்​ஸ், ஆட்​டோமொபைல் என வெவ்​வேறு பாடப்​பிரிவு​களில் ஏறத்​தாழ ஒரு லட்​சம் இடங்​கள் உள்​ளன. இருப்​பினும் கடந்த சில ஆண்​டு​களாகவே பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் அனைத்து இடங்​களும் நிரம்​புவ​தில்​லை. ஏறத்​தாழ 50%இடங்​களே நிரம்​பு​கின்றன.

    மாணவர்​களுக்கு செமஸ்​டர் தேர்வு முறை இருந்து வரு​கிறது. செமஸ்​டர் தேர்​வில் மொத்​த​முள்ள 100 மதிப்​பெண்​ணில் 60 மதிப்​பெண் தியரி தேர்வு, மீத​முள்ள 40 மதிப்​பெண் இண்​டர்​னல் எனப்​படும் அகம​திப்​பெண் ஆகும். தியரி தேர்​வில் தேர்ச்சி பெற குறைந்​த​பட்​சம் 40 சதவீத மதிப்​பெண் பெற வேண்​டும். தியரி தேர்​வில் கேட்​கப்​படும் வினாக்​களுக்கு மாணவர்​கள் விரி​வாக விடை எழுத வேண்​டும்.

    இந்​நிலை​யில், இதற்கு பதிலாக கொள்​குறி வகை வினா முறையை நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்​படுத்த தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் முடிவு செய்​துள்​ளது. இதனால் மாணவர்​களின் படைப்​பாற்​றலை​யும், புரிந்​து​கொள்​ளும் திறனை​யும், சிக்​கல்​களுக்கு தீர்வு காணும் திறனை​யும் மதிப்​பிட முடி​யாது என்று ஆசிரியர்​கள் அச்​சம் தெரி​வித்​துள்​ளனர்.

    இதுதொடர்​பாக அவர்​கள் கூறிய​தாவது: கொள்​குறி வகை வினா முறை​யால் நினை​வாற்​றலைத்​தான் சோதித்து அறிய முடி​யுமே தவிர பயன்​பாட்டு அறிவையோ சிந்​திக்​கும் ஆற்​றலையோ கண்​டறிய முடி​யாது. அவர்​களின் தொழில்​நுட்​பத் திறன் பாதிக்​கப்​படும். தொழில்​நுட்​பக் கல்வி என்​பது படைப்​பாற்​றல், சிக்​கல்​களுக்கு தீர்வு காணுதல், படம் வரைவது, திட்​ட​மிட்ட விளக்க முறை என பலவகை திறன்​களை உள்​ளடக்​கியது. அப்​படி இருக்​கும்​போது, கொள்​குறிவகை வினா முறை​யால் இந்த திறன்​களை எப்​படி மதிப்​பீடு செய்ய முடி​யும். அது குருட்டு மனப்​பாடத்​துக்கு மாணவர்​களை அழைத்​துச் செல்​லுமே ஒழிய பாடங்​கள் மீதான புரிதலை நிச்​ச​யம் ஊக்​குவிக்​காது.

    பாலிடெக்​னிக் முடித்​து​விட்டு பொறி​யியல் படிப்​பில் சேரும் மாணவர்​கள் அதற்​கான பாடத்​திட்​டத்​தில் 60 சதவீதம் படித்து முடித்​தவர்​களாக இருப்​பர். ஆனால், தற்​போது பாலிடெக்​னிக் பாடத்​திட்​டம் குறைக்​கப்​பட்​டுள்​ள​தால், பொறி​யியல் பட்​டப்​படிப்​பில் பாலிடெக்​னிக் மாணவர்​கள் தேர்ச்சி பெற சிரமப்​படு​கிறார்​கள். இத்​தகைய சூழலில் தற்​போது அப்​ஜெக்​டிவ் முறையி​லானகேள்​வி- பதில் முறை அமல்​படுத்​தி​னால் மாணவர்​கள் மேலும் பாதிக்​கப்​படு​வர். இதனால், ஒட்​டுமொத்த தொழில்​நுட்​பக் கல்​வி​யின் தரமும் பாதிக்​கும்.

    பாலிடெக்​னிக் முடித்து வெளியே வரும் மாணவர்​கள் தொழில்​நுட்​பத்​திறன் மிகுந்​தவர்​களாக இருக்க மாட்​டார்​கள். மாறாக தொழிலா​ளர் என்ற நிலை​யில்​தான் இருப்​பார்​கள். வேண்​டு​மா​னால், தியரி தேர்​வில் தலா 50 சதவீத கேள்வி​களை கொள்​குறிவகை வினா முறை​யிலும், விரி​வாக பதில் எழுதும் வகை​யிலும் அமைக்​கலாம். இவ்​வாறு அவர்​கள் கூறினர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    ஐக்​கிய நாடு​களின் வளர்ச்சி திட்​டத்​தில் தமிழக பள்ளி மாணவர்​கள் 6 பேர் சர்​வ​தேச தூத​ராக தேர்வு

    August 25, 2025
    கல்வி

    பள்ளிக்கல்வி அமைச்சு பணியாளர்களுக்கு ஆசிரியர் பதவி உயர்வு

    August 25, 2025
    கல்வி

    பொறியியல் கலந்தாய்வு முடிவில் 37,000 இடங்கள் காலி

    August 25, 2025
    கல்வி

    இலக்​கி​யத் திறனறி தேர்வு: செப்​டம்பர் 4 வரை விண்ணப்பிக்கலாம்

    August 25, 2025
    கல்வி

    தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்: கல்லூரிகளில் போட்டிகளை நடத்த யுஜிசி உத்தரவு

    August 24, 2025
    கல்வி

    முதுகலை பொறியியல் படிப்பு – ‘கேட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆக.25 முதல் விண்ணப்பிக்கலாம்

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செர்ரிகளை சாப்பிடுவது நினைவக இழப்பு மற்றும் அல்சைமர் ஆபத்தை மெதுவாக்கும், இது கூர்மையான நினைவகத்திற்கு எளிதான படியை வழங்குகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புகார் அளித்தவர் கைது: தர்மஸ்தலா வழக்கில் ‘திடீர்’ திருப்பமும், நீடிக்கும் மர்மமும்!
    • 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸி.க்கு ஆறுதல் வெற்றி: தொடரை 2-1 என்று கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா
    • மக்கள் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை கிடையாது: பழனிசாமி குற்றச்சாட்டு
    • ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன: எச்சரிக்கை அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை மற்றும் தடுப்பு உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.