Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, January 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»பள்ளிக் கல்வி துறை அமைச்சர் தொகுதி அரசு பள்ளியில் மரத்தடியில் பயிலும் மாணவர்கள்!
    கல்வி

    பள்ளிக் கல்வி துறை அமைச்சர் தொகுதி அரசு பள்ளியில் மரத்தடியில் பயிலும் மாணவர்கள்!

    adminBy adminJuly 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பள்ளிக் கல்வி துறை அமைச்சர் தொகுதி அரசு பள்ளியில் மரத்தடியில் பயிலும் மாணவர்கள்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்களுக்கு மைதானத்திலும், மரத்தடியிலும் வகுப்பறைகள் நடத்தப்படுகின்றன.

    திருச்சி மாவட்டம் காட்டூர் பாப்பாக் குறிச்சியில் ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 600 மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைந்துள்ளது.

    கூடுதல் வகுப்பறை கட்டும் பணி தொய்வாக நடைபெறுவதால், பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாமல், மாணவர்கள் மைதானத்திலும், மரத்தடியிலும் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். தற்போது ஆடிக் காற்றில் பறக்கும் குப்பை, தூசியை எதிர்கொண்டு மிகுந்த சிரமத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.

    இது குறித்து அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.ரகமதுல்லா, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நலத் துறை மேல்நிலைப் பள்ளி, இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு வரப்பிரசாதம். இங்கு போதிய வகுப்பறை இல்லாததால், மாணவர்கள் மரத்தடியிலோ, மைதானத்திலோ அமர்ந்து காற்று, வெயில், மழை என பல்வேறு காலநிலைகளை எதிர்கொண்டு கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது. மாணவர்களின் வசதிக்காக கட்டப்படும் கூடுதல் வகுப்பறைகளின் கட்டுமானப் பணிகள் இன்னம் நிறைவடையவில்லை. அந்த வகுப்பறைகளும் சிறிதாக உள்ளன.

    இதேபோல, பள்ளியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவி, பல மாதங்களாக பழுதடைந்து கிடக்கிறது. இதனால், மாணவர்கள் சுத்திகரிக்கப்படாத நீரை குடித்து வருகின்றனர். மாணவர்களுக்கு கழிப்பிட வசதியும் போதவில்லை. எனவே, கூடுதல் கழிப்பிடங்கள் கட்டித் தர வேண்டும். துப்புரவு பணியாளர்கள் 2 பேரை நியமிக்க வேண்டும். பள்ளியின் சுற்றுச்சுவர் குறைவாக இருப்பதால் சமூக விரோதிகள் தங்கள் அநாகரிக செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். எனவே, இப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மழைக் காலத்துக்குள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், சுற்றுச் சுவரை உயரமாக கட்டித் தரவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், போதிய கழிப்பிட வசதிகளை விரைந்து செய்து கொடுக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கூறியது: ரூ.1.40 கோடி மதிப்பில் 2,800 சதுர அடி பரப்பளவில் தரை தளம், முதல் தளத்துடன் கூடிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஒரு கணிணி ஆய்வகம், 6 வகுப்பறைகள் கொண்ட இக்கட்டிடம் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் அரசு பொதுத் தேர்வு நடைபெற்றதால் கட்டுமானப் பணி நடைபெறவில்லை. இதனால் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. இதர அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து உரிய முறையில் செய்து தரப்படும் என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2,000 பேருக்கு டேட்டா சயின்ஸ் பயிற்சி: சென்னை ஐஐடி சிறப்பு திட்டம்

    December 3, 2025
    கல்வி

    விடுமுறை நாட்களில் தேர்வுப் பணி; மாற்று விடுப்பு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    நாளை முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: தேர்வை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

    December 3, 2025
    கல்வி

    இளம் வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் அறிவுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு 

    December 3, 2025
    கல்வி

    பள்ளி வாகனங்கள் மூலம் படிப்பை வசமாக்கிய பழங்குடியினர் நலத்துறை!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உணர்ச்சி ரீதியாக கிடைக்காத கூட்டாளிகளின் 5 அறிகுறிகள்
    • மயில் இறகுகளை கண்டு பல்லிகள் பயப்படுவது ஏன்: மறைந்துள்ள காரணத்தை கண்டுபிடி, பல்லிகளை விரட்ட எப்படி பயன்படுத்துவது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டுமாரோலேண்ட் தாய்லாந்து 2026: ஆன்லைனில் முன் பதிவு செய்வது எப்படி, முக்கிய சிறப்பம்சங்கள், அனுமதிக்கப்படாத விஷயங்கள் மற்றும் பட்டாயாவின் முதல் ஆசிய பதிப்பான EDM மேஜிக் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வினைத்திறன் மிக்க பெற்றோருக்குரியது குழந்தையின் நடத்தையை எவ்வாறு வடிவமைக்கிறது, அதை எவ்வாறு மாற்ற முடியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சமையலறைக்கு சிறந்த சுவர் நிறம் எது? சுத்தமாகவும் விசாலமாகவும் தோற்றமளிக்கும் வண்ணங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.