Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»பள்ளிகளில் ரூ.24 கோடியில் காலநிலை கல்வி திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
    கல்வி

    பள்ளிகளில் ரூ.24 கோடியில் காலநிலை கல்வி திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

    adminBy adminApril 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பள்ளிகளில் ரூ.24 கோடியில் காலநிலை கல்வி திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

    சட்டப்பேரவையில் நேற்று நிதித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் பேசினர்.

    இதற்கு பதில் அளித்து நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கடந்த 2024-2025-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 6.5 சதவீதமாக இருந்த நிலையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 9.5 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி விகிதம் முன்னெப்போதும் இருந்திராத மிகப்பெரிய வளர்ச்சியாகும். இந்த நீடித்த வளர்ச்சி வாயிலாக. 2030-க்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முதல்வரின் இலக்கை நம்மால் எளிதாக எட்ட முடியும்.

    மேலும், சேவைத் துறையின் வளர்ச்சி 12.7 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தில் 7 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அவர்களில் 100 வயதை கடந்தவர்களும் உள்ளனர். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    தொடர்ந்து நிதித்துறை தொடர்பாக அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: மதுராந்தகம், அரக்கோணம், குளித்தலை, சீர்காழி, சாத்தூர், திருச்செந்தூர் ஆகிய 6 இடங்களில் ரூ.10.96 கோடி செலவில் புதிய சார்நிலை கருவூலக அலுவலகங்கள் கட்டப்படும். கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் புதியதாக பணி நியமனம் செய்யப்பட்ட 250 பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை பயிற்சி அளிக்கப்படும்.

    அரசு தணிக்கையாளர்களின் தொழில்திறன் மேம்பாட்டுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்படும். தணிக்கையர்கள், மற்றும் தணிக்கை நிறுவனங்களின் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய தலைமை தணிக்கை இயக்குநர் அலுவலகத்தில் ஓர் உதவி மையம் நிறுவப்படும்.

    சுற்றுச்சூழல் துறை: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும். இதன்மூலம் பள்ளிகளில் சூழல் மன்றங்கள் விரிவுபடுத்தப்படும். மாணவர்களுக்கு இயற்கை முகாம்கள் நடத்தப்படும். கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் அரிப்பைத் தடுக்க கடலோர மாவட்டங்களான கடலூர் மற்றும் தூத்துக்குடியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உயி்ர்க் கேடயங்கள் உருவாக்கப்படும்.

    ராஜபாளையம் சஞ்சீவி மலையை பாதுகாக்கவும், காடுகளை வளர்க்கவும் ரூ.5 கோடியில் சஞ்சீவி மலை மறுசீரமைப்பு மற்றும் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

    தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பசுமை பள்ளி திட்டம் 4.0, ரூ.20 கோடி செலவில் மேலும் 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும். சுற்றுச்சூழல் விருதுகளுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்படும். அதன்படி முதல் பரிசு ரூ.50 ஆயிரமாகவும் 2-ம் பரிசு ரூ.30 ஆயிரமாகவும், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.

    தமிழக ஆறுகள் மற்றும் முகத்துவாரங்களில் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்கும் வகையில் ரூ.4 கோடியில் முன்னோடி திட்டம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    அரசு பள்ளிகளில் ஜூலை 25-ல் மேலாண்மை குழு கூட்டம்: பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு

    July 19, 2025
    கல்வி

    பள்ளி கல்வித்துறையில் முன்னோடி திட்டங்கள்: தமிழக அரசுக்கு அமெரிக்க குழு பாராட்டு

    July 18, 2025
    கல்வி

    தொலை​தூர கல்வி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்​டிப்பு: இக்னோ பல்​கலைக்​கழகம் அறி​விப்பு

    July 18, 2025
    கல்வி

    பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் 36,731 பேருக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு

    July 18, 2025
    கல்வி

    தமிழகம் முழுவதும் நாட்டுப்புற கலை பயிற்சிக்கான சேர்க்கை இன்று தொடக்கம்!

    July 18, 2025
    கல்வி

    8-ம் வகுப்பு தனித்தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆப்டிகல் மாயை: 4321 களின் கடலுக்கு மத்தியில் கூர்மையான மூளை உள்ள ஒருவர் மட்டுமே 4312 ஐக் காணலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அரசியல் சாசனத்தை அகற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி: கார்கே குற்றச்சாட்டு
    • தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டுக்காக ரூ.21.47 கோடி அபராதம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
    • இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க ’10 -10-10 விதி ‘, மருந்துகள் தேவையில்லை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘போதைப் பொருள் இல்லாத இந்தியா’ பிரச்சாரத்தில் இணைவீர்: இளைஞர் ஆன்மிக மாநாட்டில் மத்திய அமைச்சர் அழைப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.