Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»நீங்கள் ஏன் டோட்டோசானைப் படிக்க வேண்டும்? | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு
    கல்வி

    நீங்கள் ஏன் டோட்டோசானைப் படிக்க வேண்டும்? | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு

    adminBy adminSeptember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நீங்கள் ஏன் டோட்டோசானைப் படிக்க வேண்டும்? | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நமது வாழ்க்கையின் இனிமையான நினைவுகள் குறித்துக் கேட்டால், உடனே நம் மனம் பால்ய காலத்தை நோக்கித் தாவும். அதுவே, நம் பள்ளி வாழ்க்கையைக் குறித்துக் கேட்டால்? பரீட்சைகள், குச்சி வைத்திருக்கும் ஆசிரியர்கள், வீட்டுப் பாடங்கள் என்று மிரட்டுவதாகவே இருக்கும்.

    ஆனால், தனது பள்ளி, அதன் தலைமையாசிரியர், பள்ளிப் பாடவேளைகள் குறித்து முழுக்க முழுக்க இனிமையான நினைவுகள் நிறைந்த ஒரு நூலை ஒருவர் எழுத முடியுமா? நிச்சயமாக முடியும் எனக் காட்டினார் டெட்சுகோ குரோ யனகி – அது ‘டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி’ என்கிற நூல்.

    சு.வள்ளி நாயகம், சொ.பிரபாகரன் மொழிபெயர்ப்பில் முதலில் சவுத் விஷன் வெளியீ டாகவும் பிறகு நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீ டாகவும் வந்தது. மாற்றுக் கல்வி முறைகள் குறித்து தமிழ்நாட்டின் தீவிர செயல்பாட்டாளர்கள் யாரிடமாவது பேச ஆரம்பித்தால், அவர்கள் உச்சரிக்கும் முதல் பெயர் டோட்டோசானாகவே இருக்கும்.

    1981இல் ஜப்பானிய மொழியில் வெளியான இந்த நூல் அதற்குப் பிறகு நடைபெற்ற கல்வி குறித்த எல்லா முக்கிய விவாதங்களிலும் இடம்பிடித்த ஒன்று. 30க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜப்பானிய மொழியில் மட்டும் 80 லட்சம் பிரதிகளும், உலகம் முழுவதும் 2.5 கோடிப் பிரதிகளும் விற்றுள்ளன.

    உலக அளவில் தனிநபர் சுயசரிதை அதிகம் விற்றதற்கான கின்னஸ் சாதனையை இந்த நூல் படைத்துள்ளது. இந்த நூலைப் படித்த பிறகு, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான, படைப்பாற்றல் மிக்க ஒரு நட்சத்திரம் என்பதை வளர்ந்தவர்களான பெற்றோரோ, ஆசிரியர்களோ உணர்ந்து கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது.

    எல்லாக் குழந்தைகளையும்போல் டோட்டோ சானும் சுட்டித்தனம் செய்யும் ஒரு குழந்தை. அவள் செல்லும் பள்ளிகளில் எல்லாம் படிப்பில் அவளுக்குக் கவனமில்லை, வகுப்பைத் தொந்தரவு செய்கிறாள் என ஆசிரியர்கள் அலுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இது எதற்காகவும் டோட்டோசானின் அம்மா கவலைப்படுவதே இல்லை. ரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட டோமாயி பள்ளியில் கடைசியாகச் சேர்த்துவிடுகிறார்.

    அந்தப் பள்ளித் தலைமை யாசிரியர் கோபயாஷி, குழந்தைகளின் மனப் போக்குக்கு ஏற்ப கற்பிப்பதை வலியுறுத்துகிறார். பரந்த உலகின் அனைத்து அம்சங்களையும் மிக இயல்பாக அறிமுகப்படுத்துகிறது அந்தப் பள்ளி. அங்கு வரும் குழந்தைகள் வீட்டுக்குப் போக விரும்புவதே இல்லை.

    எந்த வகையிலும் திணிப்புக்கு உள்ளாகாத டோட்டோசான் போன்ற குழந்தைகள், வழக்கமாகக் கற்பனை செய்யப்படாத புதிய வேலைகளில் பிற்காலத்தில் ஜொலிக்கிறார்கள். கெடுவாய்ப்பாக இரண்டாம் உலகப் போரின்போது டோமாயி பள்ளி தகர்க்கப்படுகிறது.

    அதற்குப் பிறகு அந்தப் பள்ளியைப் போன்ற ஒன்றை உருவாக்கு வது கனவாகவே தேங்கிவிடுகிறது. அந்தக் கனவுக்குப் புதிய சிறகைக் கொடுத்து, உலகெங்கும் குழந்தைகளையும் கற்பித்தல் முறையையும் மாறுபட்ட வகையில் புரிந்துகொள்ள தூண்டிக்கொண்டே இருக்கிறது டோட்டோசான் நூல்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    ஆன்லைனில் ஏரோநாட்டிக்ஸ், பொருளாதார பட்டப் படிப்புகள் – சென்னை ஐஐடியில் விரைவில் அறிமுகம்

    September 5, 2025
    கல்வி

    தாகூரின் சாந்திநிகேதன் | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு

    September 5, 2025
    கல்வி

    மாண்டிசோரி… எதை வேண்டுமானாலும் படிக்கலாம்! | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு

    September 5, 2025
    கல்வி

    இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு

    September 5, 2025
    கல்வி

    செப்.5: எப்படி வந்தது ஆசிரியர் தினம்?

    September 5, 2025
    கல்வி

    தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவன தரவரிசை: சென்னை ஐஐடி தொடர்ந்து 7-வது முறையாக முதல் இடம்

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆன்லைனில் ஏரோநாட்டிக்ஸ், பொருளாதார பட்டப் படிப்புகள் – சென்னை ஐஐடியில் விரைவில் அறிமுகம்
    • இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்: டொனால்டு ட்ரம்ப்
    • தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
    • ஹஜ் 2026: செப்டம்பர் 24 முதல் ஆன்லைன் பதிவைத் திறக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; மேலும் தெரிந்து கொள்ளுங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அனுமதியின்றி தனது பாடல்கள் பயன்பாடு: இளையராஜா வழக்கு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.