Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»நாளை பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
    கல்வி

    நாளை பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்

    adminBy adminJuly 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாளை பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

    தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம்(ஏஐசிடிஇ) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில் நடப்பு கல்வியாண்டு(2025-26) அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆவணங்கள் சரிபார்ப்பு உட்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 141 கல்லூரிகளுக்கு விளக்கம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘ஒரு கல்லூரியில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர்கள், ஆய்வகங்கள், நூலகம் உட்பட கட்டமைப்பு வசதிகள் இருப்பது அவசியமாகும். நடப்பாண்டு இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த கல்லூரிகளில் 141-ல் பேராசிரியர் பற்றாக்குறை, நூலகங்கள், ஆய்வகங்கள் குறைபாடு போன்ற பல்வேறு கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லை.

    இதையடுத்து 141 கல்லூரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த கல்லூரிகள் குறைபாடுகளை 45 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். அதன்பின் நேரில் ஆய்வு செய்த பின்னரே இணைப்பு அங்கீகாரம் உறுதி செய்யப்படும். இல்லையெனில் அந்த கல்லூரிகளின் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். இதற்கிடையே பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.

    இந்தசூழலில் அண்ணா பல்கலை.யின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள், பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கல்லூரியின் சேர்க்கை பெற்ற பின் அதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும். எனவே, சம்மந்தப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    ‘ப’ வடிவ இருக்கை அறிவிப்புக்கு வித்திட்ட ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ மலையாளப் படம்!

    July 13, 2025
    கல்வி

    காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகளில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்த உத்தரவு

    July 13, 2025
    கல்வி

    பள்ளிகளில் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் ஏன்? – தமிழக பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

    July 12, 2025
    கல்வி

    குரூப் 4 தேர்வில் 11.48 லட்சம் பேர் பங்கேற்பு: வினாத்தாள் கடினமாக இருந்ததால் தேர்வர்கள் கவலை

    July 12, 2025
    கல்வி

    டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது: 4 ஆயிரம் காலியிடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி

    July 12, 2025
    கல்வி

    தலைமை ஆசிரியர்கள் 34 பேருக்கு டிஇஓ-ஆக பதவி உயர்வு

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு!
    • திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து குறித்து உயர்நிலை விசாரணை: இபிஎஸ் வலியுறுத்தல்
    • திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து: பெட்ரோல், டீசல் நிரப்பிய 18 டேங்கர்கள் தீக்கிரை – நடந்தது என்ன?
    • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 7 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
    • “சட்டம் ஒழுங்கை சரிசெய்யாவிட்டால் போராட்டம்” – தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் எச்சரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.