Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»தமிழ்க் கற்றல் சட்டம் 18 ஆண்டுகளாக அமலுக்கு வராதது ஏன்? – தமிழ் ஆர்வலர்கள் கேள்வி
    கல்வி

    தமிழ்க் கற்றல் சட்டம் 18 ஆண்டுகளாக அமலுக்கு வராதது ஏன்? – தமிழ் ஆர்வலர்கள் கேள்வி

    adminBy adminJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழ்க் கற்றல் சட்டம் 18 ஆண்டுகளாக அமலுக்கு வராதது ஏன்? – தமிழ் ஆர்வலர்கள் கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் இயற்றப்பட்ட தமிழ்க் கற்றல் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின்னும், 18 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாதது ஏன் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இது குறித்து தமிழ் ஆர்வலரும், பேராசிரியருமான ஆ.பிரம்மநாயகம் கூறியது: ‘இந்தியாவின் முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். அதில் மும்மொழிக் கொள்கையும், இந்தியும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அத்துடன் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், அந்த இருமொழிகளில் ஒன்றான தமிழ் கட்டாயம் என்று கூறப்படவில்லை. அவருக்குப் பின்னர் தமிழகத்தை ஆண்ட முதல்வர்களும் தமிழ் கட்டாயம் என தெளிவாகக் கூறவில்லை. அதேபோல், தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழில் பெரிதாக பெயர்ப்பலகை இருக்க வேண்டுமன 1948-ல் வரையறுக்கப்பட்ட சட்டத்தையும் யாரும் பொருட்படுத்தவில்லை.

    பல்வேறு இடங்களில் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளிலும், தமிழில் சிறிய எழுத்துகளிலும் இருந்த பெயர்ப் பலகைகளில் தற்போது முழுவதுமாக ஆங்கிலம் மட்டுமே முதன்மையாக உள்ளது. முன்னாள் அமைச்சர் மு.தமிழ் குடிமகன் சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்தி தமிழகம் எங்கும் தமிழ்ப் பெயர்ப் பலகையை அமைக்க வழி வகுத்தார். ஆனால் அவருக்குப் பின்னர் பெயர்ப் பலகைகள் மீண்டும் ஆங்கிலத்துக்கே மாறின.

    2006-ம் ஆண்டு அன்றைய முதல்வர் மு.கருணாநிதி இயற்றிய தமிழ் கற்றல் சட்டத்தை 2007-ல் உயர் நீதிமன்றமும், 2008-ல் உச்சநீதிமன்றமும் உறுதி செய்த பின்னரும்கூட 18 ஆண்டுகளாகியும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் பாடத்திட்ட பள்ளிகளில் இன்றைய சூழலில் தமிழகத்தில் தமிழ் 3-வது பாடமாகவும், இந்தி அல்லது சமஸ்கிருதம் 2-வது பாடமாகவும் நடைமுறையில் உள்ளது.

    வெளி மாநிலங்களிலிருந்து வரும் மாணவர்கள் எவ்வாறு தமிழை படித்து தேர்வெழுத முடியும் என்கிறார்கள். ஆனால் கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் அவரவர் மொழிகளில் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து 9, 10-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதில் தவறில்லை. ஆனால் 6 முதல் 8-ம் வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு விலக்கு தேவையில்லை. அவர்கள் தமிழ் கற்க தனி பாடநூல்கள் உருவாக்கி 10-ம் வகுப்பு தேர்வெழுத வைக்க வேண்டும்.

    திருமுருகன் என்பவர் பெயர்ப் பலகைகள் சட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை என இரு பொதுநல வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். 2-வது வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்காகும். அப்போது வெறும் ரூ.50 மட்டுமே அபராதத் தொகையாக விதிக்கப்பட்டதால் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அந்த அபராதத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்துவோம் என தமிழக அரசு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிகாரிகள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழ்க் கற்றல் மற்றும் தமிழில் பெயர்ப் பலகைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும்” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    கல்வி உதவித் தொகை பெறுவதற்கான என்​எம்​எம்​எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை விரைந்து பதிய உத்தரவு

    July 28, 2025
    கல்வி

    அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய குறும்படங்கள் ஒளிபரப்பு: பள்ளிக் கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

    July 28, 2025
    கல்வி

    டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் அழைப்பு

    July 28, 2025
    கல்வி

    5 ஐஐடி-களில் புதிதாக 1,300 இடங்கள்

    July 28, 2025
    கல்வி

    ஆபரேஷன் சிந்தூர், ஷுபான்ஷு ஷுக்லா பற்றி பாடம்: என்சிஇஆர்டி.க்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு

    July 28, 2025
    கல்வி

    திருப்பத்தூர் அருகே வகுப்பறை கட்டிடம் சேதம்: கோயில் வளாகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்!

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒவ்வொரு பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய சிவப்பு உதட்டுச்சாயத்தின் 5 சின்னமான நிழல்கள் – இந்தியாவின் நேரங்கள்
    • செவ்வாய் கிரகங்கள் மற்றும் ஆழமான விண்வெளி பயணங்களில் ஆரோக்கியமான விண்வெளி வீரர் வாழ்க்கைக்கு விண்வெளியில் வளரும் தாவரங்கள் முக்கியம் என்பதை நாசா நிரூபிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹாரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ்
    • ‘உக்ரைன் உடனான போரை 12 நாளில் நிறுத்தாவிட்டால்…’ – ரஷ்ய அதிபர் புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
    • ‘லூசிஃபர் 3’ பற்றி வதந்தி: பிருத்விராஜ் தரப்பு விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.