Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»தமிழக ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2,075 பணியிடங்கள் காலி: ஆர்டிஐ தகவலும் தாக்கமும் என்ன?
    கல்வி

    தமிழக ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2,075 பணியிடங்கள் காலி: ஆர்டிஐ தகவலும் தாக்கமும் என்ன?

    adminBy adminOctober 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழக ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2,075 பணியிடங்கள் காலி: ஆர்டிஐ தகவலும் தாக்கமும் என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை; தமிழகம் முழுவதும் உள்ள 1,138 ஆதிதிராவிடர் பள்ளிகளில் கடந்த பல ஆண்டாக 360 தலைமை ஆசிரியர்கள் உள்பட 2,075 பணியிடங்கள் காலியாக உள்ளன. நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களை கொண்டு சமாளிப்பதால், ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி தரமும், அவர்கள் எதிர்காலமும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கடந்த 1988-ம் ஆண்டு சமூக நலத் துறையிலிருந்து பிரிந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கல்வியறிவு, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் 833 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப் பள்ளிகள், 108 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 1,138 எண்ணிக்கையிலான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த 2024-25 கல்வியாண்டின் நிலவரப்படி மொத்தம் 98,124 மாணவர்கள், இப்பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதே 2023-24 கல்வியாண்டில் 1.01 லட்சமும், 2022-23 கல்வியாண்டில் 1.06 லட்சமும், 2021-22 கல்வியாண்டில் 1.23 லட்சமாக மாணவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது மூன்றே ஆண்டுகளில் சுமார் மாணவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சம் குறைந்துள்ள தகவல், மதுரை கே.கே.நகரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கார்த்திக் சேகரித்த ஆர்டிஐ தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இது குறித்து கார்த்திக் கூறுகையில், ‘‘மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததற்கு நிரந்தர ஆசிரியர்கள் பற்றாகுறை, தகுதியுமில்லாத தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களைக் கொண்டு பள்ளி செயல்படுவதே முக்கிய காரணம். இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையராகத்தின் ஆர்.டி.ஐ மூலமாக பல்வேறு புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன. இப்பள்ளிகளில் 360 தலைமை ஆசிரியர்கள், 483 பட்டதாரி ஆசிரியர்கள், 1060 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட மொத்தம் 2075 பணியிடங்கள் காலியாக உள்ளன. உண்மைநிலை இப்படியிருக்க, 875 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அரசு மழுப்பல் தகவல்களை கொடுக்கின்றனர்.

    ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கப்படும் நிதியை முறையாகவும், முழுமையாகவும் கல்விக்கென்று செலவு செய்வதை அரசு தவிர்த்து வருகிறது. இதன் எதிரொலியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் நியமித்தால் செலவு ஏற்படும் என்று, குறைந்த சம்பளத்தில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலமாக திறமையும், தகுதியுமில்லாத 829 பேரை தற்காலிக தொகுப்பூதிய சம்பளத்தின் அடிப்படையில் வெறும் ரூ.8,73,00,000 (எட்டு கோடியே எழுபத்தி மூன்று லட்சம்) மட்டுமே ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு தேர்தெடுத்துள்ளனர்.

    தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18,000-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000-ம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000-ம் ஊதியம் வழங்குகின்றனர். சிறந்த அடிப்படைக் கல்வி கிடைக்காமல் ஆதிதிராவிடர் மாணவர்கள் கடும் சிரமத்தையும் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.

    இப்பள்ளிகளில் பணியாற்றுவதற்காக தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், கணினி பயிற்றுனர்கள் என்று மொத்தம் 5,995 நிரந்தர பணியாளர்கள் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட 5,995 நிரந்தர பணியாளர்கள் பணியிடங்களில் இதுவரை 2,075 பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பபடாமல் உள்ளது’’ என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்களை வழங்க உத்தரவு 

    October 6, 2025
    கல்வி

    காந்திகிராம பல்கலை. உலக ஆராய்ச்சியில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது: வேந்தர் கே.எம்.அண்ணாமலை

    October 5, 2025
    கல்வி

    தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தரநிலை அறிக்கை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    October 5, 2025
    கல்வி

    பெட்ட குறும்பர் பழங்குடியினத்தின் முதல் வழக்கறிஞர் கின்மாரி!

    October 4, 2025
    கல்வி

    போக்குவரத்து விதிகளை மாணவர்கள் மதிக்க வேண்டும்: தோல் ஏற்றுமதி குழும மேலாண் இயக்குநர் அறிவுரை

    October 4, 2025
    கல்வி

    மாணவர்களை வெற்றியாளர்களாக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம்

    October 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 10.10 கி.மீ நீளத்தில் கோவை – அவிநாசி சாலை மேம்பாலம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    • துபாயின் அரச குடும்பத் தலைவரின் நிகர மதிப்பு என்ன? ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மரங்களில் தங்கம் வளர முடியுமா? விஞ்ஞானிகள் இயற்கையின் மறைக்கப்பட்ட தங்கத்தை உருவாக்கும் செயல்முறையைக் காண்கிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சனிடம் விசாரிக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு
    • மார்பக புற்றுநோய்: இந்த 3 விஷயங்கள் மார்பக புற்றுநோயைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ஓபி-ஜின் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.