Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு ஆரம்பம்
    கல்வி

    தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு ஆரம்பம்

    adminBy adminJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு ஆரம்பம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகம் முழு​வதும் அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் முதலாம் ஆண்டு மாணவர்​களுக்கு நேற்று வகுப்பு தொடங்கியது. மாநில கல்​லூரி உள்பட பல கல்​லூரி​களில் சிவப்பு கம்பள விரிப்​புடன் மேளதாளம் முழங்க மாணவர்​களுக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

    நடப்பு கல்வி ஆண்​டில் அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் சேரு​ம், முதலாம் ஆண்டு மாணவர்​களுக்கு, ஜூன் 30-ம் தேதி வகுப்பு தொடங்​கும் என கல்​லூரி கல்வி ஆணை​யர் ஏ.சுந்​தர​வல்லி அறி​வித்​திருந்​தார். அதன்​படி, தமிழகம் முழு​வதும் அரசு கல்​லூரி​களில் முதலாம் ஆண்டு மாணவர்​களுக்கு வகுப்​பு​கள் நேற்று தொடங்​கின.

    கல்​லூரி​யில் முதன்​முதலாக அடி​யெடுத்து வைத்து மாணவ-​மாணவி​களை சீனியர் மாணவர்​களும், பேராசிரியர்​களும் அன்​போடு வரவேற்று வகுப்​பறைக்கு அழைத்​துச் சென்​றனர். சென்​னை​யில் மாநில கல்​லூரி உள்பட பல கல்​லூரி​களில் மாணவர்​களுக்கு மேள​தாளம் முழங்க உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

    மாநில கல்​லூரி​யில் முதல்​வர் ராமன் தலை​மை​யில் மாணவர்​களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்​கப்​பட்​டது. என்​எஸ்​எஸ் மாணவர்​கள் கரகாட்​டம் ஆடி​யும், பறையடித்​தும் முதலாம் ஆண்டு மாணவர்​களை​யும் பெற்​றோரை​யும் வரவேற்​றனர். சீனியர் மாணவர்​கள் பூங்​கொத்து கொடுத்து வரவேற்பு அளித்​தனர்.

    இதுதொடர்​பாக கல்​லூரி​யின் முதல்​வர் ஆர்​.​ராமன் கூறும்​போது, “முதலாம் ஆண்டு மாணவர்​களுக்கு ஒரு வார காலம் படிப்பு அல்​லாமல், பொது​வான விஷ​யங்​கள் குறித்து கற்​பிக்​கப்​படும். மனித உரிமை​கள், மதிப்​பீடு​கள், உளவியல், எதிர்​கால இலக்​கு, உயர்​கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​பு​கள், அதற்​கான போட்​டித் ​தேர்​வுகள் போன்​றவை குறித்து நிபுணர்​கள் கருத்​துரை வழங்​கு​வர். அவர்​களு​டன் மாணவர்​கள் கலந்​துரை​யாடலாம்.

    மேலும், பல்​கலைக்​கழகத் தேர்​வு​கள், செமஸ்​டர் முறை குறித்​தும் சொல்​லித்​ தரப்​படும். முதல் நாளில் மாநிலங்​களவை உறுப்​பினர் வில்​சன், வழக்​கறிஞர் அருள்​மொழி ஆகியோர் மனித உரிமை​கள் குறித்து மாணவர்​களிடையே உரை​யாற்​றினர்” என்​றார்.

    இதற்​கிடையே, முதலாம் ஆண்டு மாணவர்​களுக்​கான ஒரு​வார கால அறி​முக பயிற்​சித் திட்​டத்தை சென்னை ராணி மேரி கல்​லூரி​யில் உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்​கர் தொடங்​கி ​வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் கல்​லூரி கல்வி ஆணை​யர் ஏ.சுந்​தர​வல்​லி, ராணி மேரி கல்​லூரி​யின் முதல்​வர்​ உமா மகேஸ்​வரி மற்​றும்​ பேராசிரியைகள்​ கலந்​துக்​கொண்​டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    அரசு கல்லூரிகளில் 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்

    July 23, 2025
    கல்வி

    யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

    July 23, 2025
    கல்வி

    குருப்-4 தேர்வு கீ ஆன்ஸர் வெளியீடு

    July 22, 2025
    கல்வி

    டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வுக்கு ஜிடிஎன் அகாடமி சார்பில் இலவச உணவு, உறைவிட வசதியுடன் 3 மாதங்கள் பயிற்சி

    July 21, 2025
    கல்வி

    தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர்கள் ஆக.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    July 21, 2025
    கல்வி

    10-ம் வகுப்பு சான்றிதழில் திருத்தமா? – உரிய ஆவணங்களை இணைக்க தேர்வு துறை அறிவுறுத்தல்

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அகமதாபாத் விமான விபத்தில் இறந்தோர் உடல்களை ஒப்படைப்பதில் குளறுபடியா? – பிரிட்டன் ஊடக செய்திக்கு இந்தியா மறுப்பு
    • நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!
    • டெய்லர் ஸ்விஃப்ட்டின் காதலன் டிராவிஸ் கெல்ஸின் சகோதரர், கடலில் ஒரு சுறாவைக் கண்ட பிறகு மனைவியை விட்டு வெளியேறுவதை ஒப்புக்கொள்கிறார், பெருங்களிப்புடைய போட்காஸ்ட் தருணத்தில் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தர்மஸ்தலா கோயில் விவகாரம்: யூடியூப் நிறுவனத்தின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
    • நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ்ஸின் சொத்து விவரத்தை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.