Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகள் மூடலா? – தொடக்கக் கல்வித் துறை விளக்கம்
    கல்வி

    தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகள் மூடலா? – தொடக்கக் கல்வித் துறை விளக்கம்

    adminBy adminAugust 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகள் மூடலா? – தொடக்கக் கல்வித் துறை விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பரவும் தகவல் குறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் சுமார் 31,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 19 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, நடப்பாண்டு மாணவர் சேர்க்கை இல்லாத 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக நீலகிரி 17, சிவகங்கை 16, திண்டுக்கல் 12, சென்னை, ஈரோடு, மதுரை தலா 10 என்றவாறு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்து தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியது: “மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் 5 வயது நிரம்பிய குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே 868 அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்றி மூடப்பட்டுள்ளன.

    அதேபோல், மூடப்பட்ட அரசுப் பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் திறன்மிகு வகுப்பறைகள் உள்ளன. சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். 207 பள்ளிகளும் தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளன. இதற்கு முன் மூடப்பட்ட பள்ளிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்தி திறக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கை இந்த ஆண்டும் தொடரும். எனவே, அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதற்கு மக்கள் நகரங்களை நோக்கிய இடப்பெயர்ந்ததும், 5 வயது நிரம்பிய குழந்தைகள் எண்ணிக்கை குறைந்ததும் காரணமாகும்” என்றனர்.

    இதனிடையே, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், “அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் இல்லாததால் தமிழகம் முழுவதும் 207 பள்ளிகள் மூடப்பட உள்ளதாக கூறப்படுவது தவறான தகவல். அரசுப் பள்ளிகளில் இன்னும் மாணவர் சேர்க்கை பூர்த்தி அடையவில்லை. ஒரு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இல்லை எனில், அதற்குரிய காரணம் குறித்து ஆராய்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, அந்தப் பள்ளி தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    மாணவர் சேர்க்கை இல்லை என்று கூறி 207 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவதா? – அன்புமணி கண்டனம்

    August 12, 2025
    கல்வி

    அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆக.25 கடைசி

    August 12, 2025
    கல்வி

    பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து – அரியருடன் பிளஸ் 2 பயிலும் 20,000 மாணவர்களின் நிலை என்ன?

    August 11, 2025
    கல்வி

    பொறியியல் கலந்தாய்வு 3-வது சுற்றில் 64,629 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

    August 11, 2025
    கல்வி

    சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக.14 வரை அவகாசம்

    August 11, 2025
    கல்வி

    “8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ், ஆனால்…” – அமைச்சர் அன்பில் மகேஸ் விவரிப்பு

    August 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ”மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிப்போம்” – கிருஷ்ணகிரியில் இபிஎஸ் உறுதி
    • சுதந்திர தினம் 2025 இல் அணிய 10 சின்னமான புடவைகள்
    • பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறால் ரயில்கள் தாமதம்
    • மூளை மூடுபனி ஏன் இரத்த சர்க்கரை உறுதியற்ற தன்மையின் அடையாளமாக இருக்கலாம் – இந்தியாவின் நேரங்கள்
    • தடுப்பணை கட்டுவதாகச் சொல்லி பாலாற்றில் மணல் கடத்தல்! – அமைச்சருக்குப் பயந்து ஆக்‌ஷன் எடுக்காமல் இருக்கிறார்களா அதிகாரிகள்?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.