Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கை எப்போது அமலாகும்? – ஓராண்டாக கிடப்பில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு
    கல்வி

    தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கை எப்போது அமலாகும்? – ஓராண்டாக கிடப்பில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு

    adminBy adminMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கை எப்போது அமலாகும்? – ஓராண்டாக கிடப்பில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை சமர்பிக்கப்பட்டு 11 மாதங்களாகிவிட்ட சூழலில், அதை அமல்படுத்தாமல் தமிழக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு-2020 தமிழக அரசுதொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக்கொள்கை உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்தனர்.

    இதையடுத்து கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவறிக்கை தயாரிக்கும் பணிகளில் குழுவினர் ஈடுபட்டனர். அதன்படி மாநிலக் கல்விக் கொள்கை குழுவினர் சுமார் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2023 அக்டோபரில் தயார் செய்தனர். எனினும், வெள்ளப் பாதிப்புகள், மக்களவைத் தேர்தல் பணிகளால் வரைவு அறிக்கை வெளியிடுவதில் தாமதம் நிலவியது. அதன்பின் மாநிலக் கல்விக் கொள்கை வரைவறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம், ஒய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் ஜூலை 1-ம் தேதி சமர்பித்தனர்.

    அதில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், பள்ளிக்கல்வியில் தமிழை முதல் மொழியாக்குதல், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது, கல்வி வளாகங்களில்போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்க்க சிறப்பு நடவடிக்கை என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கை மீது அனைத்து தரப்பின் கருத்துகள் கேட்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், 11 மாதங்களாகியும் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து கல்வியாளர்கள், பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, ‘‘மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு தீவிரமாக எதிர்ப்பதாக கூறுகிறது. ஆனால், அதிலுள்ள பல்வேறு திட்டங்கள் ஏற்கெனவே வெவ்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதைசரிசெய்ய மாநிலக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தமிழக அரசும் தீவிரம் காட்ட வேண்டும். அதற்கு முதலில் வரைவறிக்கையை பொது தளத்தில் வெளியிட வேண்டும். அதுதொடர்பான அனைவரின் கருத்துகளை கேட்டு பெற்று, திருத்தங்கள் செய்து அவற்றை நடப்பு கல்வியாண்டிலேயே செயல்முறைக்கு கொண்டுவர வேண்டும். அதற்கான பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்’’என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தை அமல்படுத்த உத்தரவு

    July 5, 2025
    கல்வி

    பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு ஆக.1-ல் தமிழகம் முழுவதும் தொடக்கம்

    July 5, 2025
    கல்வி

    ஆர்டிஇ திட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் நெருக்கடி – பெற்றோர்கள் தவிப்பு

    July 5, 2025
    கல்வி

    க்யூட் நுழைவு தேர்வுக்கான முடிவுகள் வெளியானது: 2,679 மாணவர்கள் சாதனை

    July 5, 2025
    கல்வி

    மாதம் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் முதுகலை டிப்ளமா படிப்பு

    July 4, 2025
    கல்வி

    க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,679 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை!

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி: அதிமுக ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கைது
    • ஆப்டிகல் மாயை: “வெவ்வேறு” டைனோசரை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அமர்நாத் யாத்திரையில் பேருந்துகள் மோதல்: 36 பக்தர்கள் காயம்
    • சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது திருச்செந்தூர்
    • பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாது​காப்பு: திருமாவளவன் வரவேற்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.