Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»தமிழகத்தில் மாணவிகளுக்கான ‘அகல் விளக்கு’ திட்டம் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    கல்வி

    தமிழகத்தில் மாணவிகளுக்கான ‘அகல் விளக்கு’ திட்டம் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    adminBy adminAugust 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் மாணவிகளுக்கான ‘அகல் விளக்கு’ திட்டம் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மனம், உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பள்ளி மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நாளை (ஆக. 9) தொடங்கிவைக்கப்பட உள்ளது.

    தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை நாளை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்.

    இதுகுறித்து கல்வித் துறை அலுவலர்கள் கூறியது: மாணவிகளுக்கு உடல், மனம் மற்றும் சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகள் நேரடியாகவும், செல்போன் பயன்படுத்துவதன் மூலமாக இணையதளம் வாயிலாகவும் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாமல் சிலர் தவறான முடிவையும் எடுத்து விடுகின்றனர். இது, அவருக்கு கல்வியிலும், குடும்பத்தினருக்கு பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது.

    எனவே, இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து மாணவிகள் தங்களை மீட்டு பாதுகாத்துக் கொள்வதற்காக ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்காக குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இக்குழுவில் ஆசிரியைகள், மாணவிகள் இடம் பெறுவர்.

    மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் கண்டறிந்து அதற்குரிய தீர்வுகளை காண்பர். இதற்கான விழிப்புணர்வு கையேடும் வழங்கப்படும். அந்த கையேட்டில் பிரச்சினைகளை தீர்க்கும் முறைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக செல்போன், இணையதள பயன்பாட்டாலும் மாணவ- மாணவிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே, அரசு தொடங்கவுள்ள இத்திட்டம் மாணவிகளுக்கு மனம், உடல் மற்றும் சமூக ரீதியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும். இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கி உள்ளது என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    இரவு நேர திறந்தவெளி மது பார்… – கெலமங்கலம் அரசுப் பள்ளி அவலம்!

    August 8, 2025
    கல்வி

    சர்வதேச வானியல் – வானியற்பியல் ஒலிம்பியாட்: மும்பையில் 64 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு

    August 7, 2025
    கல்வி

    தமிழக பாணியில் அரசுப் பள்ளி மாணவிகள் சீருடையை மாற்றிய புதுச்சேரி கல்வித் துறை

    August 7, 2025
    கல்வி

    தமிழ் மரபு குறித்து எடுத்துரைக்கும் விதமாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

    August 7, 2025
    கல்வி

    பொறியியல் மாணவர் சேர்க்கை; இன்று 3-வது சுற்று கலந்தாய்வு: தொழில்நிறுவன ஒதுக்கீடு அதிகரிப்பு

    August 7, 2025
    கல்வி

    பள்ளிகளிலேயே ஆதார் பயோ மெட்ரிக் புதுப்பிக்க ஏற்பாடு: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு

    August 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் முழுக்க ஏசி மயமானது!
    • ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் குழந்தைகளில் பொதுவான நடத்தை மாற்றங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த பாவம் என்ன?’ – மாநில கல்விக் கொள்கை மீது எல்.முருகன் 11 கேள்விகள்
    • 10 குழந்தை பெயர்கள் ‘தெய்வீக ஒளி’ அல்லது ‘புனித பளபளப்பு’ என்று பொருள்
    • பிப்ரவரியில் அறிமுகமான வருமான வரி மசோதா வாபஸ்: ஆக.11-ல் புதிய மசோதா தாக்கல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.