
சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணிகள் நாளை (அக்டோபர் 31) நடைபெறவுள்ளன. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.
மாநிலம் முழுவதுள்ள 7,717 தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாகப் படிக்கலாம்.

