Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழந்த மதுரை மழலையர் பள்ளியின் அங்கீகாரம் ரத்து!
    கல்வி

    தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழந்த மதுரை மழலையர் பள்ளியின் அங்கீகாரம் ரத்து!

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழந்த மதுரை மழலையர் பள்ளியின் அங்கீகாரம் ரத்து!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த தனியார் மழலையர் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மதுரை கே.கே.நகரில் மாவட்ட நீதிமன்றத்துக்கு எதிரிலுள்ள விநாயகா நகரில் தனியார் மழலையர் பள்ளி 10 ஆண்டாக செயல்படுகிறது. இங்கு ஃப்ரி கேஜி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளும், குழந்தைகள் பராமரிப்பு மையமும் செயல்படுகின்றன. மேலும் தற்போது கோடைகால பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகின்றன. இப்பள்ளியில் 60 குழந்தைகள் படித்ததில், கோடைகால பயிற்சிக்கு 20 குழந்தைகள் வந்து கொண்டிருந்தனர்.

    இதில் யானைமலை ஒத்தக்கடையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அமுதன்-சிவஆனந்தி ஆகியோரின் மகள் ஆருத்ரா படித்தார். ஏப். 29-ம் தேதி பள்ளி வளாகத்தில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிந்து மழலையர் பள்ளி தாளாளர் திவ்யா, உதவியாளர் வைரமணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக மதுரை கோட்டாட்சியர் ஷாலினி விசாரணை நடத்தி பள்ளிக்கு ‘சீல்’ வைத்தார்.

    இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சுதாகர் ஆகியோரும் விசாரணை நடத்தினர். இதில் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பி.சுதாகர் விசாரணை நடத்தி அறிக்கையை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், சென்னையிலுள்ள தனியார் பள்ளிகள் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக தனியார் மழலையர் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து இன்று (ஏப்.30) அப்பள்ளியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

    இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் பி.சுதாகர் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் 64 மழலையர் பள்ளிகளில் 25 பள்ளிகள் ஆரம்பம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெற்றுள்ளன. மீதமுள்ள 39 பள்ளிகளில் 19 பள்ளிகள் செயல்படவில்லை. மீதமுள்ள 20 பள்ளிகள் தொடர் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர். இவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம்.

    இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், தனியார் பள்ளிகள் துறை இயக்குநருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். குழந்தை உயிரிழந்த தனியார் பள்ளி நிர்வாகம் அரசு விதிகளை மீறி செயல்பட்டதால் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளோம். அதற்கான நோட்டீஸ் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த செய்தி பள்ளி தாளாளருக்கு பதிவுத் தபாலிலும் அனுப்பியுள்ளோம்,” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு – மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

    June 28, 2025
    கல்வி

    பொறியியல் சேர்க்கை தரவரிசை பட்டியல்: முழு கட்ஆப் மதிப்பெண் பெற்று 144 மாணவர்கள் சாதனை

    June 28, 2025
    கல்வி

    பிளஸ்-1 மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 30-ல் வெளியீடு

    June 28, 2025
    கல்வி

    மாணவர் வருகைப் பதிவேட்டில் சாதி விவரம் கூடாது: அரசின் வழிகாட்டுதல்கள் என்னென்ன?

    June 27, 2025
    கல்வி

    “சமூகம், தேசத்துக்காக உங்கள் இலக்கை நிர்ணயுங்கள்” – கல்லூரி விழாவில் ஜெகதீப் தன்கர் பேச்சு

    June 27, 2025
    கல்வி

    பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூலை 7 முதல் கலந்தாய்வு

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழில் வெற்றி பெறாத ‘குபேரா’ – இயக்குநர் ஆதங்கம்
    • தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: ஐகோர்ட்
    • ஷெபாலி ஜாரிவாலாவின் மரணம் கவலையைத் தூண்டுகிறது: ஏன் அதிகமான பெண்கள் திடீரென இதய பிரச்சினைகள் இறங்குகிறார்கள்? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அற்புதம்…” – விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி சிலாகிப்பு
    • ‘உருது’ பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.