Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
    கல்வி

    தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

    adminBy adminSeptember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஊட்டி: தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காந்தள் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நகராட்சி உருது நடுநிலை பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கபட்டு வந்தது. இதனையடுத்து கடந்த சட்டபேரவை கூட்டத்தின் போது காந்தள் உருது நடுநிலை பள்ளி தரம் உயர்த்தபடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று தரம் உயர்த்தபட்ட உருது உயர் நிலை பள்ளியை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து, உதகை லாரன்ஸ் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான அடைவு தேர்வு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. விரைவில் பள்ளிக்கு தேவையான வகுப்பறைகள் கட்டவும் ஆசிரியர்கள் நியமிக்க தேவையான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்தில் எங்கெல்லாம் பள்ளியில் தரம் உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதோ அங்கெல்லாம் பள்ளிகள் படிப்படியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எட்டாம் வகுப்பு படித்த பிறகு எங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வருவதை தடுக்கவும் மாணவர்களின் இடை நிற்றலை தவிர்ப்பதற்காக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 500 பள்ளிகள் தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளது. அதில், 31 பள்ளிகள் முதற்கட்டமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது காலியாக உள்ள 1721 ஆசிரியர்களுக்கான அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பும் போது முன்னுரிமை அளித்து நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் காலியிடங்கள் நிரப்பப்படும்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மீது தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை வரும் 19-ம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட இருக்கிறது. தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தேசிய திறந்தநிலை பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் பங்கேற்க முடியுமா? – கல்வி வாரியம் விளக்கம்

    September 16, 2025
    கல்வி

    பி.எட்., எம்.எட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க செப்.30 வரை அவகாசம்: அமைச்சர் கோவி. செழியன்

    September 15, 2025
    கல்வி

    இளைஞர்களின் கனவுகளை எட்டுவதற்கான சிறகை தைத்துக் கொடுக்கும் ‘கலாம் சபா’ – வி.டில்லிபாபு பெருமிதம்

    September 15, 2025
    கல்வி

    மின்னணு கழிவுகளை கையாள்வதில் கவனம் தேவை: கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

    September 15, 2025
    கல்வி

    பள்​ளி​களில் அமையும் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்கள்

    September 15, 2025
    கல்வி

    முதுநிலை மேலாண்மை படிப்புக்கான ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘தலைவர்களே ஒன்று சேருங்கள்’… இபிஎஸ் + ஓபிஎஸ் போஸ்டரால் பெரியகுளத்தில் பரபரப்பு!
    • மூளையின் வளர்ச்சியைத் தூண்டும் ‘அதிசய மூலக்கூறுக்கு’ இந்த பயிற்சி ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்று நரம்பியல் விஞ்ஞானி அறிவுறுத்துகிறார், இல்லை, அது இயங்கவில்லை
    • வெறுப்பு பேச்சு விவகாரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
    • ஓட்ஸ் அல்லது தினை: எந்த சூப்பர்ஃபுட் தானியங்கள் நார்ச்சத்து, இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை அதிகரிக்கும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 12,000+ தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.