சென்னை: ஏறத்தாழ 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி இன்று (புதன்கிழமை) பிற்பகல் வெளியிட்டது. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசையை தேர்வாணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை 12-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

