Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, December 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது: 4 ஆயிரம் காலியிடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி
    கல்வி

    டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது: 4 ஆயிரம் காலியிடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி

    adminBy adminJuly 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது: 4 ஆயிரம் காலியிடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் காலி​யாக​வுள்ள 3,935 பணி​யிடங்​களை நிரப்​புவதற்​காக டிஎன்​பிஎஸ்சி குருப்-4 தேர்வு இன்று (சனிக்​கிழமை) காலை நடை​பெறுகிறது. இத்​தேர்வை தமிழகம் முழு​வதும் 13 லட்​சத்து 89,738 பேர் எழுதுகின்​றனர். அவர்​களில் 8 லட்​சத்து 63,068 பேர் பெண்​கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

    அரசின் பல்​வேறு துறை​களில் இளநிலை உதவி​யாளர், தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்டச்​சர் மற்​றும் கிராம நிர்​வாக அலு​வலர், வனக்​காப்​பாளர், தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாட்டு வாரிய உதவி​யாளர் உள்​ளிட்ட பதவி​களில் 3,935 காலி​யிடங்​களை நிரப்​பும் வகை​யில் ஒருங்​கிணைந்த குருப்-4 தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி ஏப்​ரல் 25-ம் தேதி வெளி​யிட்​டது. அதற்​கான விண்​ணப்​பங்​கள் ஆன்​லைனில் மே மாதம் 24-ம் தேதி வரை பெற்​றுக்​கொள்​ளப்​பட்​டன.

    கல்வித் தகுதி 10-ம் வகுப்பு: குருப்-4 தேர்​வுக்​கான அடிப்​படை கல்​வித்​தகுதி 10-ம் வகுப்பு என்ற போதி​லும் இத்​தேர்​வுக்கு பட்​ட​தா​ரி​கள், முதுகலை பட்​ட​தா​ரி​கள் பொறி​யியல் பட்​ட​தா​ரி​கள் என உயர் கல்வித்​தகுதி உடையவர்​களே அதிக எண்ணிக்​கை​யில் விண்ணப்​பித்​தனர். தேர்​வுக்கு 13 லட்​சத்து 89, 743 பேர் விண்​ணப்​பித்​திருந்த நிலை​யில், அதில் தகு​தி​யில்​லாத 5 பேரின் விண்​ணப்​பங்​கள் மட்​டும் நிராகரிக்​கப்​பட்​டன.

    5 லட்​சத்து 26,553 ஆண்​கள், 8 லட்​சத்து 63,068 பெண்​கள் 117 மூன்​றாம் பாலினத்​தவர் என 13 லட்​சத்து 89,738 பேர் தேர்​வெழுத அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு கடந்த வாரம் ஆன்​லைனில் ஹால்​டிக்​கெட்​கள் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டன. இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டபடி, குருப்-4 தேர்வு இன்று (ஜூலை 12) 3,034 மையங்​களில் நடை​பெற உள்​ளது. சென்னை 311 தேர்​வுக் கூடங்​களில் 98,848 பேர் எழுதுகின்​றனர். குருப்-4 தேர்​வுக்​கான அனைத்து ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டுள்​ள​தாக டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் தெரி​வித்​தார்.

    தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதி​யம் 12.30 மணிக்கு முடிவடை​யும். தேர்​வர்​கள் தேர்வு தொடங்​கு​வதற்கு ஒரு மணி நேரத்​துக்கு முன்​பாக தேர்வு மையத்​துக்கு செல்​லு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளனர். தேர்​வில் பொதுத்​தமிழ் பாடத்​தில் இருந்து 100 கேள்வி​கள், பொது அறி​வு, அடிப்​படை கணிதம் ஆகிய​வற்​றில் 100 கேள்வி​கள் என மொத்​தம் 200 கேள்வி​கள் அப்​ஜெக்​டிவ் முறை​யில் கேட்​கப்​படும். 3 மணி நேரத்​துக்​குள் விடையளிக்க வேண்​டும். ஒரு கேள்விக்கு ஒன்​றரை மதிப்​பெண் வீதம் மொத்​தம் 300 மதிப்​பெண்.

    காலியிடம் அதிகரிக்கும்: குருப்-4 தேர்​வுக்கு நேர்​காணல் கிடை​யாது. எனவே, எழுத்​துத்​தேர்​வில் அதிக மதிப்​பெண் பெற்​றாலே அரசு பணி வாய்ப்பு உறுதி என்​பது குறிப்​பிடத்​தக்​கது. தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்ள காலி​யிடங்​கள் 3,935 என்ற போ​தி​லும் காலி​யிடங்​களின் எண்​ணிக்கை 10 ஆயிரம் அளவுக்கு அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2,000 பேருக்கு டேட்டா சயின்ஸ் பயிற்சி: சென்னை ஐஐடி சிறப்பு திட்டம்

    December 3, 2025
    கல்வி

    விடுமுறை நாட்களில் தேர்வுப் பணி; மாற்று விடுப்பு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    நாளை முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: தேர்வை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

    December 3, 2025
    கல்வி

    இளம் வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் அறிவுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு 

    December 3, 2025
    கல்வி

    பள்ளி வாகனங்கள் மூலம் படிப்பை வசமாக்கிய பழங்குடியினர் நலத்துறை!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வரலாற்றில் டிசம்பர் 27 அன்று நடந்தது: ஆண்டுகளில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘மக்கள் இறந்துவிடுவார்கள்…’: சோஹ்ரான் மம்தானியின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் நியமனத்தை எலோன் மஸ்க் சாடுகிறார் FDNY கமிஷனர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வேகம்: சொற்பிறப்பியல், கலாச்சாரம் மற்றும் வேகமாக செல்வதற்கான நவீன போதை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எண் 36 ஐக் கண்டறியவும்: இந்த 9-வினாடி ஆப்டிகல் மாயை உங்கள் மூளை உண்மையில் எவ்வளவு கூர்மையாக இருக்கிறது என்பதை சோதிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2026 இல் தென் கொரியாவின் கருப்பு எள் லட்டை அனைவரும் ஏன் பருகுவார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.