Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»சேலம் செவ்வாய்பேட்டை பள்ளியின் தரம் உயர்த்த பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் கோரிக்கை
    கல்வி

    சேலம் செவ்வாய்பேட்டை பள்ளியின் தரம் உயர்த்த பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் கோரிக்கை

    adminBy adminJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சேலம் செவ்வாய்பேட்டை பள்ளியின் தரம் உயர்த்த பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையில், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதே பள்ளியில் அவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும் வகையில், தற்காலிக ஏற்பாடு செய்திட வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

    சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அவர்களது பெற்றோரும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர்.

    மனு குறித்து அவர்கள் கூறியது: “சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்ற எங்களது பிள்ளைகள், தற்போது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தொடர்ந்து பயில ஆர்வமுடன் உள்ளனர். இந்நிலையில், பள்ளியில் 8-ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. எனவே, பிள்ளைகள் 9-ம் வகுப்பு பயில, சென்னையில் உள்ள அரசுப் பள்ளிக்குத் தான் செல்ல வேண்டும்.

    ஆனால், செவ்வாய்பேட்டையிலேயே எங்கள் பிள்ளைகள் தொடர்ந்து பயின்றால், நாங்கள் அவர்களை கவனித்துக் கொள்ள முடியும். அவர்களுக்கு உதவியாகவும் இருக்கும். வெகு தொலைவில் உள்ள சென்னையில் கல்வி பயில, பிள்ளைகளை அனுப்பினால், எங்களால் அவர்களை பராமரிக்கவோ, பார்க்கவோ முடியாத நிலை ஏற்படும்.

    எனவே, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக, செவ்வாய்பேட்டை பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்புகளை தற்காலிகமாகக் கொண்டு வந்து, எங்கள் குழந்தைகளை இங்கேயே படிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். செவ்வாய்பேட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்திடம் உள்ளது.

    இந்நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரை, எங்களது குழந்தைகளுடன் நேரில் சென்று சந்தித்து, கோரிக்கையை மீண்டும் தெரிவித்தோம். இது தொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நல ஆணைய செயலாளரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

    எனவே, பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, செவ்வாய்பேட்டை பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டில் எங்கள் பிள்ளைகள் 9-ம் வகுப்பு பயில, தற்காலிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், பிள்ளைகளின் கல்வி தடைபடும் நிலை உள்ளது” என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    கர்நாடகாவில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற 33 சதவீத மதிப்பெண்: பரிந்துரையை பரிசீலிக்கிறது அரசு

    July 27, 2025
    கல்வி

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆக.4 முதல் கலை திருவிழா போட்டிகள்

    July 27, 2025
    கல்வி

    கனவு நிறைவேறுமா? – நாளை அப்துல் கலாமின் 10-வது நினைவு தினம்!

    July 26, 2025
    கல்வி

    பொறியியல் சேர்க்கை 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

    July 26, 2025
    கல்வி

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது: தரவரிசையில் நெல்லை மாணவர் முதல் இடம்

    July 26, 2025
    கல்வி

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தோல்நோய் நீக்கும் நாகப்பட்டினம் குமரன் | ஞாயிறு தரிசனம்
    • பிஹார் மாநிலத்தில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மோசடி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
    • விஜயவாடா – ஹைதராபாத் சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 2 டிஎஸ்பிக்கள் உயிரிழப்பு
    • பிற்பகல் ஆற்றல் சரிவை வெல்ல 12 வழிகள் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆந்திர டிஜிபி முன்னிலையில் 21 நக்சலைட்கள் சரண்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.