இந்நிலையில், மாணவர்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய வினாக்களை தயாரிக்க சென்னை ஐஐடி உதவியுடன் கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வி கவுன்சில் துணைத்தலைவர் எம்.பி.விஜயகுமார் கூறியதாவது: பொதுவாகவே நமது மாணவர்களுக்கு சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன், ஆராயும் திறன் குறைவாக உள்ளது. காரணம் மாணவர்களின் நினைவாற்றலைச் சோதிக்கும் வகையில்தான் தேர்வுகளில் வினாக்கள் கேட்கப்படுகின்றன. அந்த வகையில் தேர்வு நோக்குடன்தான் அவர்களும் பாடங்களை படிக்கின்றனர்.

