சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலி இடங்கள் உள்ளன. தகுதி உள்ளவர்கள் நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2025-26-ம் கல்வி ஆண்டில் சேர அவசர சிகிச்சை, மயக்க மருந்து, அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், எலும்பியல், சுவாச சிகிச்சை, இதயவியல், இசிஜி, மனநலம், மருத்துவப் பதிவேடு ஆகிய பிரிவுகளில் டெக்னீஷியன்கள் உள்ளிட்ட ஓராண்டு மருத்துவச் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

