Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகள் நடத்த ஒப்புதல்!
    கல்வி

    சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகள் நடத்த ஒப்புதல்!

    adminBy adminJune 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகள் நடத்த ஒப்புதல்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2026 முதல் ஆண்டுதோறும் 2 பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கு சிபிஎஸ்இ வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ், நாடு முழுவதும் 29,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு சிபிஎஸ்இ முடிவு செய்தது.

    இதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய வரைவு அறிக்கையை சிபிஎஸ்இ கடந்த பிப்ரவரியில் வெளியிட்டது. அது தொடர்பாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளும் கேட்டுப் பெறப்பட்டன. அதன் அடிப்படையில சில திருத்தங்களை செய்து பொதுத்தேர்வு மாற்றங்களுக்கு தற்போது சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுகுறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் சிலர் கூறியது: “2026 கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு இருமுறைகள் நடத்தப்படும். முதல்கட்டமாக பிப்ரவரி மாதமும், 2-ம் கட்டமாக மே மாதமும் தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு எழுத 26.60 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

    முதல்கட்ட தேர்வை அனைத்து மாணவர்களும் கட்டாயம் எழுத வேண்டும். இதன் முடிவுகள் ஏப்ரலில் வெளியிடப்படும். அந்த மதிப்பெண்களில் மாணவர்கள் மனநிறைவு கொண்டால், 2-ம் கட்ட தேர்வை எழுத வேண்டியதில்லை. மாறாக, மதிப்பெண்களை உயர்த்த விரும்பினால் மே மாத தேர்வை எழுதலாம். இதில் அதிகபட்ச மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.

    மேலும், 2-ம் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும். அதேநேரம் அகமதிப்பீட்டு தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும். இந்த மாற்றங்கள் மாணவர்கள் பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ளவும், மன அழுத்தத்தை தவிர்க்கவும் வழிவகை செய்யும்” என்று அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    பொறியியல் மாணவர் சேர்க்கை: துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    July 30, 2025
    கல்வி

    19 துணை மருத்துவ படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு தொடக்கம்

    July 30, 2025
    கல்வி

    கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில் அனிமேஷன், டிசைன் பாடங்களில் பட்டப்படிப்பு அறிமுகம்

    July 30, 2025
    கல்வி

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்: பொதுப் பிரிவுக்கு ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது

    July 30, 2025
    கல்வி

    பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

    July 29, 2025
    கல்வி

    கல்வி உதவித் தொகை பெறுவதற்கான என்​எம்​எம்​எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை விரைந்து பதிய உத்தரவு

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவிலும் சுனாமி: சீனாவுக்கும் எச்சரிக்கை
    • வரவேற்பை பெற்ற ‘அவதார் 3’ டிரெய்லர்
    • பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இந்தியாவில் கண்காட்சி தொழிலுக்கு ஏராளமான வாய்ப்புகள்: மத்திய சுற்றுலாத்துறை கூடுதல் செயலர்
    • அதிக செயல்படும் மனச்சோர்வு அறிகுறிகள்: உயர் உளவியலாளர் அதிக செயல்படும் மனச்சோர்வின் 5 முக்கியமான அறிகுறிகளைப் பகிர்ந்து கொள்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகளாவிய காலநிலை மற்றும் பூமி கண்காணிப்புக்காக ஜூலை 30 அன்று மேம்பட்ட நிசார் செயற்கைக்கோளைத் தொடங்க நாசா-இஸ்ரோ: முக்கிய நேரங்கள், நேரலை எவ்வாறு பார்ப்பது மற்றும் பிற முக்கியமான தகவல்களை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.