சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2,530 இடங்கள் இருக்கின்றன.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 16-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வரை விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 14-ம் தேதியுடன் முடிவடையும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் ஜூலை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் /www.tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.