Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»கோவை வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கை – இணையவழி கலந்தாய்வு தொடக்கம்
    கல்வி

    கோவை வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கை – இணையவழி கலந்தாய்வு தொடக்கம்

    adminBy adminJuly 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோவை வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கை – இணையவழி கலந்தாய்வு தொடக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நடப்புக் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கல்விப் பிரிவு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு, தொழிற்கல்விப் பிரிவு இடஒதுக்கீட்டுக்கான இணையவழிக் கலந்தாய்வு தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை நடக்கிறது.

    இது தொடர்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு 2025-26 கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் (வேளாண்மைப்பிரிவு) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிடப்பட்டது.

    விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மறுமதிப்பீடு, மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி மாற்றம் அவற்றுக்கான சரிபார்ப்புப் பணிகள் கடந்த 26-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களின் இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு நேரடி கலந்தாய்வு வரும் 14-ம் தேதி நடைபெறும்.

    அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான இணையவழி கலந்தாய்வு இன்று (9-ம் தேதி) தொடங்கியது. இது வரும் 15-ம் தேதி வரை நடைபெறும். பொதுக்கல்விப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு இணையவழி கலந்தாய்வும் இன்று தொடங்கி, வரும் 15-ம் தேதி வரை நடைபெறும்.

    சான்றிதழ் சரிபார்ப்புப் பணி: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இணையவழி கலந்தாய்வில் பங்கேற்று மாணவர் சேர்க்கையை உறுதி செய்த விண்ணப்பதாரர்களுக்கு முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 19-ம் தேதியும், 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 29-ம் தேதியும், 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் ஆகஸ்ட் 6-ம் தேதியும், 4-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் ஆகஸ்ட் 13-ம் தேதியும் நடைபெறும்.

    பொதுக்கல்விப் பிரிவு, தொழிற்கல்விப் பிரிவு விண்ணப்பதாரர்களில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்தவர்களுக்கு வரும் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை முதல் கட்டமாகவும், 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 2-ம் கட்டமாகவும், ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 3-ம் கட்டமாகவும், ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 4-ம் கட்டமாகவும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும்.

    துணைத் தேர்வின் மூலம் தேர்வானவர்களுக்கு இணையதள விண்ணப்பம் மற்றும் துணைக் கலந்தாய்வுக்கான தேதி, துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு முடிவு செய்யப்படும். வரும் செப்டம்பர் 3-ம் தேதி கல்லூரி திறப்பு மற்றும் அறிமுக நாள் ஆகும். வரும் செப்டம்பர் 8-ம் தேதி உடனடி மாணவர் சேர்க்கை நடைபெறும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    புதுச்சேரி இளங்கோ அடிகள் அரசு பள்ளியில் ஏஐ ஆங்கில ஆசிரியை ‘இனியா ஸ்ரீ’!

    July 9, 2025
    கல்வி

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 – புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பது எப்படி?

    July 9, 2025
    கல்வி

    தொழில்நுட்ப யுகத்தில் பிரத்யேகப் பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 12

    July 9, 2025
    கல்வி

    காம​ராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி தின போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

    July 9, 2025
    கல்வி

    பிஎட் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

    July 9, 2025
    கல்வி

    மைசூருவில் 10, 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பரிசளிப்பு!

    July 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலம் எடுக்கும் பணி தொடக்கம் – போராட்டக் குழு கண்டனம்
    • வயதானதை தாமதப்படுத்தக்கூடிய 5 காலை பழக்கம்
    • திருப்பூர்: தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்பில் 9 சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்
    • அலுவலக இலைகளை அதிகம் பயன்படுத்த பெரிய நகரங்களுக்கு அருகிலுள்ள 9 ஆஃபீட் ஹில் நிலையங்கள்
    • மதுரையில் விரைவில் தவெக மாநாடு – இடம் தேர்வு செய்யும் கட்சிக் குழு?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.