Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் வழங்க ஏற்பாடு
    கல்வி

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் வழங்க ஏற்பாடு

    adminBy adminJune 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் வழங்க ஏற்பாடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று (ஜூன் 2) முதல் திறக்கப்பட உள்ளன. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட உள்ளன.

    தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 7 முதல் 17-ம் தேதி வரையும், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8 முதல் 24-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 25-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று(ஜூன் 2) முதல் திறக்கப்பட உள்ளன.

    இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

    இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து ஆசிரியர்களுக்கும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில், இந்த கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கு உன்னை அற்பணி என்ற முன்னோர்கள் வாக்கை உறுதி ஏற்று நாம் பள்ளிக்குச் செல்வோம். பள்ளியின் வளாகத்தை தூய்மையாக்கி அதன் சுகாதாரத்தை உறுதி செய்வோம்.

    இதுதவிர மாணவர்களை அன்பாக நேசித்து கற்பித்தலை மேற்கொள்வதுடன், அவர்களின் திறன்களை கண்டறிந்து மேம்படுத்த வேண்டும். பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கு செயலாற்ற வேண்டும். பள்ளி வளாகம் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுரைகள் அதில் இடம்பெற்றுள்ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு: 3.80 லட்சம் பேர் விண்ணப்பம்; காலக்கெடு இன்று மாலை முடிவடைகிறது

    September 10, 2025
    கல்வி

    ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்

    September 9, 2025
    கல்வி

    சிடெட் தேர்வுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும்

    September 9, 2025
    கல்வி

    பொது மக்கள் பங்குத் தொகை செலுத்தியும் தரம் உயர்த்தப்படாத ஈரோடு மலைக் கிராம பள்ளிகள்!

    September 8, 2025
    கல்வி

    மாணவர்கள் மரக்கன்றுகள் நட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை  உத்தரவு

    September 8, 2025
    கல்வி

    விளையாட்டுப் பிரிவில் 5 புதிய பாடங்கள்: தேசிய திறந்தநிலை பள்ளி தகவல்

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சூளைமேட்டில் மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள்: வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி
    • மணிநேரங்களுக்கு சப்பாதிகளை மென்மையாக வைத்திருப்பது எப்படி: ஒவ்வொரு முறையும் பஞ்சுபோன்ற ரோட்டிஸுக்கு எளிதான உதவிக்குறிப்புகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எச்சரிக்கை… இங்கு எச்சரிக்கை பலகை இல்லை! – பள்ளத்தால் செங்கை மக்கள் பீதி
    • டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகள்: முகங்களைப் படிப்பதில் எவ்வளவு சிரமம் அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறிக்கலாம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘நான் இனி என்னைப் போல உணரவில்லை’: இந்திய -நாகின் தம்பதியரின் குத்தப்பட்ட கதை, சுவிட்சர்லாந்து ஹோட்டலில் சீன மனிதனால் உதைக்கப்பட்டது வைரலாகி – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.