Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் இன்று தொடக்கம்: பிளஸ் 2 மதிப்பெண்படி மாணவர் சேர்க்கை
    கல்வி

    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் இன்று தொடக்கம்: பிளஸ் 2 மதிப்பெண்படி மாணவர் சேர்க்கை

    adminBy adminMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் இன்று தொடக்கம்: பிளஸ் 2 மதிப்பெண்படி மாணவர் சேர்க்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

    திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக். படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பம் பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.

    மேற்கண்ட பிவிஎஸ்சி – ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ( ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஜூன் 20-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களது வாரிசுகள் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் அறியலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் பிவிஎஸ்சி படிப்பில் 45 இடங்கள், பிடெக் படிப்பில் உணவு தொழில்நுட்பம் – 3, பால்வள தொழில்நுட்பம் – 2, கோழியின தொழில்நுட்பம் – 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    645 காலியிடங்களுக்கு செப்.28-ல் குரூப் 2 தேர்வு: குரூப்-2 ஏ தேர்வுமுறையில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியீடு

    July 16, 2025
    கல்வி

    முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

    July 16, 2025
    கல்வி

    சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்புக்கான சேர்க்கை – ஆக.16 வரை விண்ணப்பிக்கலாம்

    July 15, 2025
    கல்வி

    புதுவையில் அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி

    July 15, 2025
    கல்வி

    காமராஜரும் கல்வி வளர்ச்சியும்!

    July 15, 2025
    கல்வி

    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 57 பேர் கட்​-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 எடுத்து சாதனை

    July 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால்
    • அஜித்குமார் குடும்பத்தினரிடம் போலீஸார், திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ வெளியீடு
    • மூளை செயல்பாடு மற்றும் நினைவகத்தை அதிகரிக்க இது சிறந்த சிற்றுண்டி என்று சிறந்த மூளை நிபுணர் கூறுகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாமல்லபுரத்தில் ஆக.3 முதல் 12 வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு
    • “மிகச் சிறந்த மகாகாவியத்தை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” – ‘ராமாயணம்’ தயாரிப்பாளர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.