Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»கால்நடை பல்கலை. உடன் இணைந்து தேசிய திறந்தநிலை பள்ளி 4 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்
    கல்வி

    கால்நடை பல்கலை. உடன் இணைந்து தேசிய திறந்தநிலை பள்ளி 4 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்

    adminBy adminAugust 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கால்நடை பல்கலை. உடன் இணைந்து தேசிய திறந்தநிலை பள்ளி 4 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ​​​​​சென்னை: தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து 4 புதிய தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.

    மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் (NIOS- National Institute of Open Schooling) பள்ளிக்கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. அதனுடன், திறன் மேம்பாட்டுக்கான தொழிற் படிப்புகளையும் வழங்குகிறது.

    அந்தவகையில் நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் இதன் வாயிலாக பலன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் – தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சேர்ந்து 4 தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்ஐஒஎஸ் தலைவர் அகிலேஷ் மிஷ்ரா, பல்கலை. பொறுப்பு துணைவேந்தர் நரேந்திரபாபு சென்னையில் கையெழுத்திட்டனர்.

    இதுகுறித்து என்ஐஒஎஸ் தலைவர் அகிலேஷ் மிஷ்ரா கூறியதாவது: தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் 10-ம் வகுப்புக்கு 39 பாடங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை தமிழ் உட்பட 19 மொழிகளில் மாணவர்கள் படிக்கலாம். பிளஸ் 2 வகுப்புக்கு 44 பாடங்கள் வழங்கப்படுகின்றன. இந்த பாடங்கள் இந்தி, ஆங்கிலம் உட்பட 7 மொழிகளில் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் தமிழ் மொழி கல்வி 12-ம் வகுப்பிலும் கொண்டு வரப்படும். இந்த கல்வி நிறுவனத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப்பணி, உயர்கல்விக்கு தகுதியானவைகளாகும்.

    ஆண்டுதோறும் ஏப்ரல்–மே மற்றும் அக்டோபர்–நவம்பர் என இருமுறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதனுடன், மாணவர்கள் விரும்பினால் இடைப்பட்ட காலத்திலும் பொதுத் தேர்வுகளை எழுதலாம். விருப்பமான பாடங்களை மாணவர்களே தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுவதுடன், தாய்மொழிகளிலும் தேர்வை எழுதவும் அனுமதி வழங்கப்படுகிறது. நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும். சாமானிய, எளிய பின்னணயை கொண்ட மாணவர்களும் இவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும்

    தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலை,யுடன் இணைந்து கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு தொடர்பான 2 சான்றிதழ் படிப்புகளும், உணவு மற்றும் பானம் தயாரிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் தயாரிப்பு ஆகியவை தொடர்பான டிப்ளமோ படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்படும்.

    இதுதவிர உடற்கல்வி, இசை போன்ற துறைகளில் ஆர்வமுடன் இருக்கும் மாணவர்களுக்காக அவர்கள் துறைசார்ந்த பிரத்யேக படிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வி ஆண்டில் இவை அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் இயக்குநர் (தொழிற் கல்வி) டி.என்.கிரி, சென்னை மண்டல இயக்குநர் வி.சந்தானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம்: மாணவர்களுக்கு யுஜிசி அலர்ட்

    September 19, 2025
    கல்வி

    உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்கான கட்டுப்பாடு தேவையற்றது: உயர் நீதிமன்றம் கருத்து

    September 19, 2025
    கல்வி

    உயர்கல்வி வழிகாட்டி பயிற்சித் திட்டம்: மாணவர் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

    September 19, 2025
    கல்வி

    ஐடிஐயில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

    September 19, 2025
    கல்வி

    பள்ளி வளாகங்களில் மழை முன்னெச்சரிக்கை: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

    September 18, 2025
    கல்வி

    பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு குறும்பட போட்டிகள்: மாணவர்கள் பங்கேற்க யுஜிசி அறிவுறுத்தல்

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அக்.1 முதல் நயினார் நாகேந்திரன் யாத்திரை: பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு
    • இந்த பொதுவான மூலப்பொருளை உணவில் சேர்ப்பது நினைவகத்தை மேம்படுத்தலாம் மற்றும் அல்சைமர் ஆபத்தை குறைக்கும் – இந்தியாவின் டைம்ஸ்
    • சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு
    • ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு
    • ‘மோடிக்கு ட்ரம்ப் அனுப்பும் பரிசுகள்…’ – எச்1பி விசா கட்டண உயர்வை முன்வைத்து காங். விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.