Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»கானல் நீராகும் மத்திய பல்கலை. திருச்சி வளாகம் – கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்
    கல்வி

    கானல் நீராகும் மத்திய பல்கலை. திருச்சி வளாகம் – கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கானல் நீராகும் மத்திய பல்கலை. திருச்சி வளாகம் – கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு மத்திய மனித வளத் துறை ரூ.385 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், திருச்சி வளாகம் அமைக்க எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யாதது கல்வியாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    2009-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது திருவாரூர் மாவட்டம் திருநீலக்குடியில் 500 ஏக்கர் பரப்பளவில் மத்திய பல்கலைக் கழகம் அமைக்கப் பட்டது. அதன்பின், மத்திய பல்கலைக் கழகத்தை எளிதாக அணுகக் கூடிய வான் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, சாலை போக்கு வரத்து வசதியுடைய திருச்சியில் ஒரு வளாகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனடிப்படையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைந்துள்ள சூரியூர் பகுதியில் ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க தமிழக அரசு முன்வந்தது.

    இதையடுத்து, நிலம் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.23 கோடியை மத்திய மனித வளத் துறை அமைச்சகத்திடம் பல்கலைக்கழக தரப்பு கோரியது. இந்நிலையில், திருவாரூர் மத்திய பல்கலை. வளாக உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.385 கோடியை மத்திய மனித வளத் துறை அண்மையில் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், திருச்சி வளாகத்துக்கு என்று நிதி ஒதுக்கீடு செய்யாதது கல்வியாளர்களிடம் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து திருச்சி மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் குழு செயற்குழு உறுப்பினர் ஜெகன்நாத் கூறியதாவது: திருச்சியில் மத்திய பல்கலைக்கழக வளாகம் அமைக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சூரியூரில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என கட்டணம் நிர்ணயம் செய்தது.

    திருச்சியில் ஐஐஎம், ஐஐஐடிக்கு இலவசமாக நிலம் தந்த தமிழக அரசு, மத்திய பல்கலைக்கழகத்துக்கு மட்டும் நிலத்துக்கு பணம் கேட்பது ஏன் என்று தெரியவில்லை. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பதால், திருச்சியில் வளாகம் அமைத்தால், திருச்சியை மையமாக கொண்டே மத்திய பல்கலைக்கழகம் செயல்பட தொடங்கிவிடும் என்ற அச்சமும் அவர்களிடம் இருக்கிறது.

    திருச்சி போன்ற மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்தால் தமிழகத்தின் அனைத்துப் பகுதி மாணவ, மாணவிகளும் பயன் பெறுவர் என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். இதற்கு மத்திய அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தரிடம் கேட்டபோது,”மத்திய பல்கலை.யில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.385 கோடி மத்திய மனித வளத்துறை ஒதுக்கியுள்ளது. திருச்சியில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க மத்திய மனித வளத்துறையிடம் ரூ.23 கோடி கேட்டுள்ளோம். விரைவில் தருவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு செப். 7-ல் பாராட்டு

    September 4, 2025
    கல்வி

    வங்கி நேர்முகத் தேர்வில் வெற்றி பெற…

    September 3, 2025
    கல்வி

    நவீன மருத்துவத் தொழில்நுட்பப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 19

    September 3, 2025
    கல்வி

    கியூரி மருத்துவமனை சார்பில் சிறுநீரக விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள் பங்கேற்பு

    September 2, 2025
    கல்வி

    அரசு கல்லூரிகளில் 560 கவுரவ விரிவுரையாளர்கள்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

    September 2, 2025
    கல்வி

    அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம்: பள்​ளிக்​கல்​வித் துறை புதிய அறிவுறுத்தல்

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மேயர்கள் மாற்றத்துக்கு ஊழல் பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலே காரணம்: பழனிசாமி குற்றச்சாட்டு
    • ஸ்மார்ட்போன் பயனர்கள் கழிப்பறையில் அதிக நேரம் செலவிடுவதால் அமெரிக்க ஆய்வு மூல நோய் ஆபத்து அதிகரிப்பதைக் கண்டறிந்துள்ளது, ஆண்கள் இன்னும் அதிகமாக அமர்ந்திருக்கிறார்கள்
    • சசிகலாவை நான் சந்திக்கவில்லை: செங்கோட்டையன் மறுப்பு
    • அஸ்பார்டேம் மற்றும் சாக்கரின் போன்ற பொதுவான இனிப்பான்கள் மூளை ஆரோக்கியத்தை 62% குறைத்து வயதை துரிதப்படுத்தக்கூடும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது: அவை காணப்படும் இடம் இங்கே
    • நண்பரின் கிட்னி தானத்தை ஏற்று சிகிச்சை தர அனுமதி: நட்பை ஆவணப்படுத்த முடியாது என நீதிமன்றம் கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.