
பல்வேறு அரசியல் மாற்றங்களும் சூழ்நிலை சவால்களும் எவ்வளவு தீவிரமாக மாறினாலும், தமிழ்ச் சமூகம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தது. இந்த விடாமுயற்சியின் பின்னணியில் கல்வியின் மீதான ஆழமான நம்பிக்கையும், அறிவார்ந்த முன்னேற்றத்தின் மீதான பற்றும் முக்கியக் காரணங்களாக அமைந்தன.
கல்விமுறை: 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்றும் செயல்படுவது நீர்மேலாண்மையில் தமிழர்களின் பொறியியல் திறனுக்குச் சான்று. கல்வி, விவசாயம், வானியல், கட்டிடக்கலை, இலக்கியம் என எந்தத் துறையிலும் தமிழர்களின் பங்களிப்பு துல்லியமாகவும் வியக்கத்தக்கதாகவும் காலம் கடந்து நிற்ப தாகவும் விளங்குகிறது. சங்க இலக் கியங்களிலிருந்து நவீன காலம் வரை, கல்வி மூலம் சமூக முன்னேற் றத்தை அடைவதில் தமிழர்கள் காட்டிய ஈடுபாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.

