Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால்தான் தமிழகத்தில் அதிக வளர்ச்சி சாத்தியமானது: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
    கல்வி

    கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால்தான் தமிழகத்தில் அதிக வளர்ச்சி சாத்தியமானது: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால்தான் தமிழகத்தில் அதிக வளர்ச்சி சாத்தியமானது: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால்தான் தமிழகத்தில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி தெரிவித்தார்.

    சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையின் சார்பில் இந்திய கல்வி நினைவு சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் “உயர் கல்வியில் உயர் சமநிலையை எட்டுவது: உள்ளுணர்வுகளும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அசோக் வர்தன் ஷெட்டி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    சமூக நீதி செயல்பாடு: கடந்த 1961-ம் ஆண்டு இந்தியாவில் தமிழகம் ஏழை மாநிலமாக இருந்தது. தமிழகத்தைவிட பிஹார் முன்னிலையில் இருந்தது. நிதி ஆயோக் அறிக்கையின்படி, கடந்த 60 ஆண்டுகளில் தமிழகம் வளர்ந்த மாநிலமாக முன்னேறியுள்ளது. சமூகநீதி உள்ளிட்டவற்றை செயல்படுத்தியதால் தமிழகம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. ஆனால், பிஹார் போன்ற மாநிலங்கள் அவற்றை செயல்படுத்தாததால், இன்னும் அதே இடத்தில் இருக்கின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் எண்ணிக்கையில் தமிழகம் கடைசி 2-வது இடத்தில் உள்ளது.

    2023-ம் ஆண்டு பிஹார் மாநில கணக்கெடுப்பின்படி அம்மாநிலத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கவில்லை. உயர் சாதியினருக்கு மட்டுமே தொழிற்கல்வி கிடைத்திருக்கிறது. அக்கல்வி மற்றவர்களை சென்றடையவில்லை. வளர்ந்த நாடுகளில், அரசுக் கல்வி நிறுவனகளில் மட்டுமே மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் அரசு கல்வி நிறுவனங்களைவிட தனியார் நிறுவனங்களே அதிகமாக உள்ளன. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன.

    இந்தியாவில் 50 சதவீத மக்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.4 லட்சத்துக்கும் குறைவு. இவர்களால் எப்படி தரமான கல்வி நிறுவனங்களில் படிக்க இயலும். ஏழை மாணவர்களையும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களையும் கல்வி நிறுவனங்களுக்கு வரவிடாமல் தடுக்கப்படுகின்றனர்.

    கல்விக்கு பணம் மறுப்பு கூடாது: கல்விக்கடனுக்கு 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி, வாகன கடனுக்கும் அதே வட்டிதான். இரண்டும் ஒன்றா, எது முக்கியம். அரசின் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தாமல் அவற்றை சீர்செய்யாமல் வளர்ச்சி குறித்து பேசக்கூடாது. அதோடு வளர்ச்சியடைந்த நாடுகளுடனும் நம்மை ஒப்பிடவும் கூடாது.

    கல்வி நிறுவனங்களுக்கும் காலநிலைக்கு ஏற்றார்போல கூடுதல் நிதி வழங்குவதற்கான பரிந்துரைகளை அரசு வழங்க வேண்டும். கல்விக்கு பணம் இல்லை என்பது தவறு, கல்விக்கு பணம் இல்லை என்று சொன்னால் நாட்டின் வளர்ச்சிக்கு ‘குட்-பை’ சொல்லிவிடலாம். ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிப்பது குறைவாக இருப்பதாலும், வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் படிக்க வராததாலும் இந்திய கல்வி நிறுவனங்களை தரம் உலக அரங்கில் குறைந்துள்ளது.

    மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு போதிய நிதி வராவிட்டாலும்கூட, 1967-க்கு பின்னர் திராவிட ஆட்சி வந்ததுக்குபின், கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதனால்தான் தமிழகம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. உத்தரபிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து அதிக நிதியை பெற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காததால் அவை இன்னும் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றன.

    முதல் மூன்று இடத்தில் தமிழகம்: இந்தியாவில் கல்வி குறித்து எந்த அளவுகோலை எடுத்தாலும் அதில் முதல் மூன்று இடத்தில் தமிழகம் இருக்கும். அதற்காக நாம் வளர்ச்சி அடைந்துவிட்டோம் என்ற எண்ணம் அல்ல. சிங்கப்பூர், ஷாங்காய், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் நம்மை ஒப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    கியூரி மருத்துவமனை சார்பில் சிறுநீரக விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள் பங்கேற்பு

    September 2, 2025
    கல்வி

    அரசு கல்லூரிகளில் 560 கவுரவ விரிவுரையாளர்கள்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

    September 2, 2025
    கல்வி

    அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம்: பள்​ளிக்​கல்​வித் துறை புதிய அறிவுறுத்தல்

    September 1, 2025
    கல்வி

    கால்நடை பல்கலை. உடன் இணைந்து தேசிய திறந்தநிலை பள்ளி 4 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்

    August 30, 2025
    கல்வி

    மாநில அரசின் உதவித் தொகை பெறும் ஆதிதிராவிட மாணவர்கள் ‘என்எம்எம்எஸ்’ ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் தவிப்பு

    August 30, 2025
    கல்வி

    திருவாரூர் மத்திய பல்கலை. உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.385 கோடி ஒப்புதல்

    August 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்
    • ’கட்டா குஸ்தி 2’ படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்
    • மின்வாரிய ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு
    • சிறந்த ஆக்ஸிஜன் ஓட்டத்திற்கு நடக்கும்போது முயற்சிக்க 5 சுவாச நுட்பங்கள்
    • அமெரிக்காவின் வரிவிதிப்பு உயர்வால் சுயசார்பு இந்தியா சபதம் ஏற்கும் பிரச்சாரத்தை தொடங்கும் பாஜக

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.