Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»கலந்தாய்வில் அரசு பொறியியல் கல்லூரிகளுக்கே முன்னுரிமை தருவதே நல்லது… ஏன்?
    கல்வி

    கலந்தாய்வில் அரசு பொறியியல் கல்லூரிகளுக்கே முன்னுரிமை தருவதே நல்லது… ஏன்?

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கலந்தாய்வில் அரசு பொறியியல் கல்லூரிகளுக்கே முன்னுரிமை தருவதே நல்லது… ஏன்?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பொறியியல் உயர்க் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வில், சரியான கல்லூரியை அடையாளம் காண்பது என்பது மாணவர் தரப்பில் தலைவலி தரக்கூடியது. நூற்றுக்கணக்கான கல்லூரிகளில் உகந்த கல்லூரிகளை, தனிப்பட்ட தெரிவுகளின் அடிப்படையில் பட்டியலிடுவது பெரும் சவாலானது. கலந்தாய்வு நடைமுறைகளி ல் பங்கேற்பதற்கு முன்னரே வசிப்பிடத்துக்கு அருகிலிருக்கும் பொறியியல் கல்லூரிகள் பக்கம் பெற்றோர் விசாரிக்க ஆரம்பித்திருப்பார்கள்.

    பலநூறு கல்லூரிகள் பரிசீலனையில் இருக்கும் போது, பள்ளிக்கூடம் போல கல்லூரிகளையும் அருகில் உள்ள திசைகளில் தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல. கல்லூரிப் பருவத்தில் காலடி வைக்கும் வளரும் மாணவர்க ளை சற்று விட்டுப்பிடிக்கலாம். நல்ல கல்லூரிகள் தொலைவில் இருந்தாலும், அதில் விரும்பிய பாடப்பிரிவு கிடைப்பின் அதற்கு முன்னுரிமை தருவதே நல்லது.

    கல்லூரி காலம் என்பது பாடங்களை படிப்பது மட்டுமல்ல. அடுத்த சில வருடங்களில் சமூகத்தில் இரண்டறக் கலப்பதற்கும், சக மனிதர்களுடன் ஊடாடி முன்னேறுவதற்குமான பாடத்தையும் வழங்கக் கூடிய இடம். கல்லூரிகள் வாயிலாகவே மாணவர்களுக்கு உலகத்தின் மீதான பார்வை விரிவடைய வாய்ப்பாகும்.பள்ளிக் கூடம் போல வீட்டின் அருகிலேயே கல்லூரிகளையும் தீர்மானிப்பது மாணவர்களை முடக்கவே செய்யும்.

    ‘மிகச் சிறந்த கல்லூரி உள்ளூரிலேயே அமைந்திருக்கிறது, மாணவரின் தனிப்பட்ட உடல் நலன் பராமரிப்பு க்கு அவசியமாகிறது’ என உரிய காரணங்கள் இருந்தால் மட்டும், அருகில் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்யலாம். மற்றபடி சரியான கல்லூரி தொலைவில் இருப்பினும் கலந்தாய்வில் அதற்கு முன்னுரிமை தருவதே நல்லது.

    கல்லூரிகளை தேர்வு செய்வதில், சில பெற்றோர் வலிய அரசுக் கல்லூரிகளை தவிர்ப்பார்கள். அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அதிகம் சுதந்திரம் தருகிறார்கள்; அவர்களை கட்டுப்படுத்து வது, கண்டிப்பது இல்லை; இதனால் படிப்பு பாழாகும், இளம் வயதில் அவசியமான ஒழுக்கம், கெடும் என்றெல்லாம் பரவலான காரணங்களை பெற்றோர் அடுக்குவார்கள். மாறாக, அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு கலந்தாய்வில் அதிகம் முன்னுரிமை தருவதே நல்லது.

    அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் தரவரிசைப் பட்டியல் உதவியோடு, தேர்ச்சி விழுக்காடு குறைந்த ஒரு சில அரசு பொறியியல் கல்லூரிகளை தவிர்த்து விடலாம். இதர அரசு கல்லூரிகளில் விருப்பமான பாடப்பிரிவு கிடைப்பின் அவற்றை கலந்தாய்வில் பரிசீலிப்பதே நல்லது.

    அரசு கல்லூரிகளுக்கு முன்னுரிமை தருவதில் முக்கிய காரணம், கட்டணம் என்பது பெயரளவில் இருப்பதே ஆகும். தனியார் கல்லூரிகளோடு ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த கல்விச் செலவும் பெருமளவு மிச்சமாகும். அந்த செலவில், மாணவருக்கு அவசியமான சிறப்பு கணினி கல்வி, பிரத்யேக லேப் டாப் உள்ளிட்ட அத்தியாவசியங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

    உயர்க் கல்வி நிலையங்களையும், பள்ளிக்கூடங்கள் போல பாவிப்பது பெற்றோரின் அறியாமை. சில தனியார் கல்லூரிகள், தேர்ச்சி விழுக்காட்டில் முன் நிற்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் மாணவர்களை கசக்கிப் பிழிகின்றன. பள்ளிக்கூடங்கள் போல தினசரி தேர்வு நடத்துகின்றன. இதனால், உயர்க்கல்விக்கு அவசியமான, பாடப்புத்தகங்களுக்கு அப்பாலான துறை சார் அறிவு மாணவர்களுக்கு குறைய காரணமாகிறது.

    அரசுக் கல்லூரிகளில் அப்படியான நெருக்கடி தருவதில்லை என்பதால், அங்கே உயர்க் கல்விக்கு அவசியமான இயல்பூக்கமும், சுதந்திரமான கற்றலும், படைப்பாற்றலும் மிளிர வாய்ப்பாகிறது. மாணவரின் மதிப் பெண்ணுக்கு அரசு பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்குமெனில், பல மடங்கு கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளை நாடுவதை தவிர்க்கலாம்.

    பொதுவாக, பள்ளிப்படிப்பு வரையிலான பிள்ளைகளின் வளர்ப்பில் அவசியமான கண்டிப்பு மற்றும் முறையான வழிகாட்டுதலை பெற்றோர்கள் வழங்கியிருந்தால், அவர்களின் உயர்க் கல்விக்காக எந்த தூர தேசத்துக்கும் நம்பிக்கையோடு வழியனுப்பி வைக்கலாம்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம்: மாணவர்களுக்கு யுஜிசி அலர்ட்

    September 19, 2025
    கல்வி

    உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்கான கட்டுப்பாடு தேவையற்றது: உயர் நீதிமன்றம் கருத்து

    September 19, 2025
    கல்வி

    உயர்கல்வி வழிகாட்டி பயிற்சித் திட்டம்: மாணவர் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

    September 19, 2025
    கல்வி

    ஐடிஐயில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

    September 19, 2025
    கல்வி

    பள்ளி வளாகங்களில் மழை முன்னெச்சரிக்கை: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

    September 18, 2025
    கல்வி

    பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு குறும்பட போட்டிகள்: மாணவர்கள் பங்கேற்க யுஜிசி அறிவுறுத்தல்

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தீபாவளிக்கு வெளியாகிறது பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’!
    • பெண்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம்
    • ரயில் நிலையங்களில் விற்கப்படும் ‘ரயில் நீர்’ விலை குறைப்பு
    • ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் ‘ஃபாட்டர்’ பெறுவதற்கான 3 காரணங்கள்: பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ரியான் பெர்னாண்டோ எடை அதிகரிப்பை எவ்வாறு சமாளிப்பது என்பதை விளக்குகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: விஎச்பி கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கண்டனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.