
‘தூக்கத்தில் காண்பது கனவல்ல; நம்மைத் தூங்க விடாமல் செய்வதே கனவு’ என்று சொன்னவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். ’கனவு உலகத்தில் வாழ்ந்தால் நனவுலகம் நழுவிப் போகும்’ என்று கூறப்பட்ட காலக்கட்டத்தில், தான் கண்ட கனவுகளின் கைபிடித்து நடை போட்டு வெற்றிகளை அள்ளியவர் கலாம்.
கனவுகளை லட்சியங்களுக்கான விதைகளாகவும் கண்டறிதல்களுக்கான தொடக்கப்புள்ளிகளாகவும் நோக்கியவர் கலாம். விண்வெளி அறிவியலில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், பல துறைகளுக்கும் பொருத்த மானதாக அமைந்தன கனவுகள் குறித்த கலாமின் கருத்துகள்.

