Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»ஏழை மாணவர்களின் பெரும் கனவுகளை வசமாக்கும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ – பள்ளிக்கல்வித் துறை செயலர் உறுதி
    கல்வி

    ஏழை மாணவர்களின் பெரும் கனவுகளை வசமாக்கும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ – பள்ளிக்கல்வித் துறை செயலர் உறுதி

    adminBy adminAugust 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏழை மாணவர்களின் பெரும் கனவுகளை வசமாக்கும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ – பள்ளிக்கல்வித் துறை செயலர் உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசு மாதிரிப் பள்​ளி​களைத் தொடர்ந்​து, அடுத்து வரும் ‘வெற்​றிப் பள்​ளி​கள் திட்​டம்’ ஏழை மாணவர்​களின் உயர்​கல்விக்​கான பெரும் கனவு​களை வசமாக்​கும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் தெரி​வித்தார். தமிழகத்​தில் அரசுப் பள்ளி மாணவர்​களின் கற்​பித்​தலை மேம்​படுத்​து​வதற்​காக மாதிரிப் பள்ளி திட்​டம் 2021-22-ம் கல்​வி​யாண்​டில் தொடங்கப்பட்​டது.

    மாநிலம் முழு​வதும் மாவட்​டத்​துக்கு தலா ஒன்று வீதம் 38 மாதிரிப் பள்​ளி​கள் தற்​போது செயல்​பட்டு வரு​கின்​றன. இந்​தப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்​வகம், ஸ்மார்ட் வகுப்​பறைகள், சிசிடிவி கேம​ரா, முழு​மை​யான உப கரணங்​களு​டன் கூடிய அறி​வியல் ஆய்​வகம், டிஜிட்​டல் கரும்​பல​கை, விளை​யாட்டு மைதானம், நுண்​கலைத்​திறன் பயிற்​சி, உண்டு உறை​விட வசதி​கள் என மாணவர்​களுக்​குத் தேவை​யான அனைத்து கட்​டமைப்​பு​களும் ஒரே வளாகத்​தில் ஏற்​படுத்​தப்​பட்​டிருக்​கும்.

    இதற்​கிடையே, இந்​தப் பள்​ளி​களில் படித்த மாணவர்​கள் ஐஐடி போன்ற தேசிய அளவி​லான முன்​னணி உயர்​கல்வி நிறு​வனங்களில் இடம் பெறு​வதற்​கான வாய்ப்​பு​கள் உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

    அதன்​படி கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் 1,878 மாணவர்​கள் முதன்மை உயர்​கல்வி நிறு​வனங்​களில் இடம் பெற்​றுள்​ளனர். இதற்கு கிடைத்த வரவேற்​பைத் தொடர்ந்​து, இந்​தத் திட்​டத்தை ‘வெற்​றிப் பள்​ளி​கள்’ எனும் பெயரில் வட்​டார அளவில் கொண்டு செல்ல வேண்​டுமென மாநிலக் கல்விக் கொள்​கை​யில் பரிந்​துரைக்​கப்​பட்​டது.

    அதன்​படி தமிழகம் முழு​வதும் உள்ள 414 வட்​டாரங்​களில் 500 வெற்​றிப் பள்​ளி​கள் உரு​வாக்​கப்​படும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வித்​தது. இதைத் தொடர்ந்து ஒவ்​வொரு வட்​டாரத்​தி​லும் ஒரு சிறந்த அரசு மேல்​நிலைப் பள்ளி தேர்வு செய்​யப்​பட்​டு, அது வெற்றிப் பள்​ளி​யாகதரம் உயர்த்​தப்பட உள்​ளன. மாதிரி பள்​ளி​களில் உள்​ளதைப் போன்ற நவீன வசதி​கள் அங்கு ஏற்படுத்தப்படும். உண்​டு, உறை​விட வசதி​கள் மட்​டும் இடம்​பெறாது. அந்த பள்​ளி​யில் வாரந்​தோறும் உயர்​கல்வி வழி​காட்டி வகுப்​பு​கள் நடை​பெறும்.

    நீட்,ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்​வு​களுக்​கான பயிற்​சி வழங்​கப்படும். இந்த பயிற்சி வகுப்​பு​களில் அந்த வட்​டாரத்​தில் உள்ள அனைத்து பிளஸ் 2 மாணவர்​களும் தங்​கள் சுய​விருப்​பத்​தின்​படி இணைந்து பயன்​பெறலாம். இந்த வெற்​றிப் பள்​ளி​கள் மூல​மாக சுமார் 50 ஆயிரம் மாணவர்​கள் பயன்​பெறு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

    இதன்​மூலம் முதன்மை உயர்​கல்வி நிறு​வனங்​களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்​களின் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும். இதற்​காக பள்​ளிக்​கல்​வித் துறை ரூ.111.37 கோடி நிதி ஒதுக்​கி​யுள்​ளது. அதில் முதல்​கட்​ட​மாக, இந்​தாண்டு 236 வட்​டாரங்​களில் வெற்​றிப் பள்​ளி​கள் தொடங்​கும் வித​மாக ரூ.54.73 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

    அடுத்த கல்​வி​யாண்​டில் எஞ்​சிய 178 வட்​டாரங்​களைச் சேர்த்து மொத்​தம் 500 வெற்​றிப் பள்​ளி​கள் தொடங்​கப்​படும் என்று பள்​ளிக் கல்​வித் துறை தெரிவித்துள்​ளது. அதே​நேரம் மாதிரிப் பள்​ளி​கள் திட்​டம் சமமற்ற கல்வி முறையை ஊக்​கு​விப்​ப​தாக என கல்வியாளர்​கள் சிலர் குற்​றம்​சாட்டுகின்​றனர்.

    இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோக​னிடம் கேட்​ட​போது, “அரசுப் பள்​ளி​களில் பெரும்​பாலும் பொருளா​தார ரீதி​யாக பின்​தங்​கிய மாணவர்​களே அதி​கம் படிக்​கின்​றனர். அவர்​களின் ஏழ்​மை​யானது, கனவு​களுக்கு தடை​யாக இருக்​கக் கூடாது. சாமானியனுக்​கும் முன்​னணி உயர்​கல்வி நிறு​வனங்​களில் பயில்​வதற்​கான வாய்ப்​பு​களை எந்த தடை​யின்றி வழங்​கு​வதற்​காகவே இந்த மாதிரிப் பள்​ளி​கள் திட்​டம் முன்​னெடுக்​கப்​பட்​டன.

    அதை பரவலாக்​கும் வித​மாக ஒவ்​வொரு வட்​டாரத்​தி​லும் வெற்றி பள்​ளி​கள் நிறு​வப்​பட்​டு, மாதிரி பள்​ளி​களுக்கு இணையானகட்டமைப்பு வசதி​கள் மற்​றும் கல்​வித்தரம் மேம்​படுத்​தப்பட உள்​ளது. திறமை மற்​றும் விருப்​பத்​தின் அடிப்​படை​யில் மாணவர்​கள் சேர்க்கை பெறு​வார்​கள்.

    மேலும், அரு​கிலுள்ள பள்​ளி​களுக்கு வழி​காட்​டு​தலை​யும் வழங்​கி, ஒட்​டுமொத்த தரத்தை உயர்த்த வழி​வகுக்​கும். படிப்​படி​யாக அனைத்து பள்​ளி​களை​யும் வெற்​றிப் பள்​ளி​களாக மாற்​று​வதற்​கான இலக்கு நிர்ணயிக்கப்படும். எனவே, இது சமமற்ற கல்வி முறையல்​ல; ஏழை மாணவர்​களின்​ பெரும்​ கனவு​களை வசமாக்​கும்​ ​முயற்​சி” என்றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    புதிய பாடத்திட்ட வடிவமைப்பு வல்லுநர் குழுவில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

    December 1, 2025
    கல்வி

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்க அனுமதி: பள்ளிக்கல்வித் துறை அரசாணை

    December 1, 2025
    கல்வி

    ஆசிரியர்கள் பற்றாக்குறை: புதுவையில் பெற்றோருடன் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

    December 1, 2025
    கல்வி

    தமிழகத்தில் எந்தெந்த பட்டம் என்னென்ன படிப்புக்கு இணையானது?

    December 1, 2025
    கல்வி

    ‘என் கல்லூரிக் கனவு…’ – முத்துமாரி பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

    December 1, 2025
    கல்வி

    படைப்புகளில் தனித்துவம் மிளிர வேண்டும்: மாணவர்களுக்கு கைத்தறி துறை செயலர் அறிவுறுத்தல்

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘கனவுகளுடன் அமெரிக்காவிற்கு வந்தார்’: ப்ரீத் ஹர்சோடாவின் நண்பர்கள் சிகிச்சைக்காக உதவியை நாடுகின்றனர், 30 இந்திய மாணவர்கள் FSU தீயில் பாதிக்கப்பட்டுள்ளனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ – மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்
    • புதிய பாடத்திட்ட வடிவமைப்பு வல்லுநர் குழுவில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
    • அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லக்‌ஷயா சென்
    • தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.