
சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆராய்ச்சி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலை. துணைவேந்தர் மருத்துவர் கி.நாராயணசாமி தலைமை வகித்தார். பதிவாளர் கி.சிவசங்கீதா வரவேற்புரையாற்றினார்.
கருத்தரங்கில் பங்கேற்ற 30 பள்ளிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற கருப்பொருள்களில் தங்கள் ஆராய்ச்சி சார்ந்த சுவரொட்டிகள் மற்றும் புதுமையான கருத்துகளை வழங்கினர்.

