Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»இரவு நேர திறந்தவெளி மது பார்… – கெலமங்கலம் அரசுப் பள்ளி அவலம்!
    கல்வி

    இரவு நேர திறந்தவெளி மது பார்… – கெலமங்கலம் அரசுப் பள்ளி அவலம்!

    adminBy adminAugust 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இரவு நேர திறந்தவெளி மது பார்… – கெலமங்கலம் அரசுப் பள்ளி அவலம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கெலமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர், இரவு காவலர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினசரி பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தைத் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் அரசு மருத்துவமனையை ஒட்டி 4 ஏக்கர் பரப்பளவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் பெண்கள் உயர் நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் கெலமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதில், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய கழிப்பறை, குடிநீர், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, போதிய கழிப்பறை இல்லாத நிலையில், இருக்கும் கழிப்பறையும் தண்ணீர் மற்றும் பராமரிப்பின்றி மூடி வைக்கப்பட்டுள்ளதால், பள்ளியின் பின்புறம் உள்ள ஏரியில் திறந்த வெளியில் மாணவர்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்கும் நிலையுள்ளது.

    இரவு நேரக் காவலாளி இல்லாததால், இரவு நேரங்களில் சிலர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு, வகுப்பறையில் உள்ள மின் விசிறி, மேசை உள்ளிட்ட உபகரணங்களைச் சேதப்படுத்திச் செல்வது தொடர்ந்து வருகிறது. வகுப்பறையின் ஜன்னல் பகுதி பின்புறம் மண் மேடாக உள்ளதால், அப்பகுதியிலிருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் தினசரி பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: அரசு ஆண்கள் பள்ளியில் போதிய கழிப்பிடம் இல்லாததால் அருகில் உள்ள ஏரிக்கு மாணவர்கள் செல்வதால், பாதுகாப்பற்ற நிலையுள்ளது. பள்ளி சுற்றுச்சுவர் கல்பலகைகளால் அமைக்கப்பட்டுள்ளதால், கல் பலகை இடைவெளி வழியக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் குடிநீர் வசதி இல்லை. விளையாட்டு மைதானம் இல்லாததால் முறையான உடற்கல்வி கிடைக்காத நிலையுள்ளது.

    இதுதொடர்பாக ஆட்சியர் ஆய்வு செய்து, கிராமப் பகுதி மாணவர்களின் கல்வி எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளியில் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். மேலும், சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளியின் நிலத்தை மீட்டு, பள்ளியில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தமிழகத்தில் மாணவிகளுக்கான ‘அகல் விளக்கு’ திட்டம் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 8, 2025
    கல்வி

    சர்வதேச வானியல் – வானியற்பியல் ஒலிம்பியாட்: மும்பையில் 64 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு

    August 7, 2025
    கல்வி

    தமிழக பாணியில் அரசுப் பள்ளி மாணவிகள் சீருடையை மாற்றிய புதுச்சேரி கல்வித் துறை

    August 7, 2025
    கல்வி

    தமிழ் மரபு குறித்து எடுத்துரைக்கும் விதமாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

    August 7, 2025
    கல்வி

    பொறியியல் மாணவர் சேர்க்கை; இன்று 3-வது சுற்று கலந்தாய்வு: தொழில்நிறுவன ஒதுக்கீடு அதிகரிப்பு

    August 7, 2025
    கல்வி

    பள்ளிகளிலேயே ஆதார் பயோ மெட்ரிக் புதுப்பிக்க ஏற்பாடு: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு

    August 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் முழுக்க ஏசி மயமானது!
    • ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் குழந்தைகளில் பொதுவான நடத்தை மாற்றங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த பாவம் என்ன?’ – மாநில கல்விக் கொள்கை மீது எல்.முருகன் 11 கேள்விகள்
    • 10 குழந்தை பெயர்கள் ‘தெய்வீக ஒளி’ அல்லது ‘புனித பளபளப்பு’ என்று பொருள்
    • பிப்ரவரியில் அறிமுகமான வருமான வரி மசோதா வாபஸ்: ஆக.11-ல் புதிய மசோதா தாக்கல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.