Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»இந்து தமிழ் – மாயாபஜாரில் மாணவி கடிதம்: பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்மார்ட் கிளாஸ் – அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு
    கல்வி

    இந்து தமிழ் – மாயாபஜாரில் மாணவி கடிதம்: பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்மார்ட் கிளாஸ் – அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு

    adminBy adminJune 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்து தமிழ் – மாயாபஜாரில் மாணவி கடிதம்: பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்மார்ட் கிளாஸ் – அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் அருகே அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடிதம் வாயிலாக மாணவி விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று உத்தரவிட்டார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள குருங்களூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி ரா.ஞானதர்ஷினி, ‘இந்து தமிழ்’ நாளிதழில் மாயாபஜார் பகுதி வாயிலாக தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் நேற்று பிரசுரமானது. அதில், மாணவர்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்திருந்ததுடன், பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதைப் பார்த்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இரு கோரிக்கைகளையும் நிறைவேற்ற, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எம்.அருணாவுக்கு உத்தரவிட்டார். மேலும், இதை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் பதிவிட்டு இருந்தார்.

    ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின், பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.உஷா ராணி கூறியதாவது: இப்பள்ளியில் 102 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கண்மாய் கரையோரமாக உள்ள இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் மழைக் காலத்தில் தண்ணீர் பள்ளிக்குள் புகுந்து விடுகிறது. மேலும், பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளால் பராமரிக்கப்பட்டு வரும் பூச்செடிகள், காய்கறி செடிகள், மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்துகின்றன.

    அதேபோல, பள்ளியில் செயல்பட்டு வந்த ஹைடெக் ஆய்வகமும் செயல்பாட்டில் இல்லை. இதனால், ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்த வேண்டும் என்றும், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்றும் மாணவி ரா.ஞானதர்ஷினி ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது, இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சர் உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    அரசு கல்லூரிகளில் 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்

    July 23, 2025
    கல்வி

    யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

    July 23, 2025
    கல்வி

    குருப்-4 தேர்வு கீ ஆன்ஸர் வெளியீடு

    July 22, 2025
    கல்வி

    டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வுக்கு ஜிடிஎன் அகாடமி சார்பில் இலவச உணவு, உறைவிட வசதியுடன் 3 மாதங்கள் பயிற்சி

    July 21, 2025
    கல்வி

    தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர்கள் ஆக.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    July 21, 2025
    கல்வி

    10-ம் வகுப்பு சான்றிதழில் திருத்தமா? – உரிய ஆவணங்களை இணைக்க தேர்வு துறை அறிவுறுத்தல்

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 20 தொகுதிக்கு திட்டமிடும் திமுக… 15-க்கு பந்தி போடும் பாஜக! – களைகட்டும் புதுச்சேரி கூட்டணி அரசியல் களேபரங்கள்
    • உங்கள் குழந்தையில் நல்ல பழக்கவழக்கங்களை எவ்வாறு வளர்ப்பது
    • மெட்ரோ ரயில்களில் பயணிக்க வசதியாக ஆக.1 முதல் சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாற திட்டம்
    • மூளை சுகாதார உதவிக்குறிப்புகள்: மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க 3 பயனுள்ள அறிவியல் ஆதரவு வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.