Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு
    கல்வி

    இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு

    adminBy adminSeptember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்தியாவில் இன்று பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருன்றன. பெண் ஆசிரியர்களும் அதிகளவில் உள்ளனர். ஆனால், பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலக்கட்டத்தில், பெண்களுக்கான முதல் பள்ளியை (1848) புணேயில் நிறுவினார் சாவித்திரிபாய் ஃபுலே. இதன் மூலம் இந்தியாவின் ’முதல் பெண் ஆசிரியர்’ என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்!

    மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள நைகான் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சாவித்திரிபாய். அவருக்கு 9 வயது ஆனபோது, 12 வயதேயான ஜோதிராவ் ஃபுலேவோடு திருமணம் செய்து வைக்கப்பட்டது. சமூகச் சீர்திருத்த வாதியான ஜோதிராவ், தனது மனைவிக்குக் கல்வியை அளித் தார். சமூகப் போராட்டங்களிலும் பங்கேற்க வைத்தார்.

    சாவித்திரிபாய், தான் கல்வி கற்றது மட்டுமன்றி, பெண்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டார். விரைவிலேயே பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தொடங்கி, அதன் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சமூகத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மையைப் போக்க கல்வியே ஆயுதம் என்பதை அழுத்தமாக நம்பினார்.

    1848இல் 9 மாணவியரோடு தொடங்கப் பட்ட முதல் பள்ளியை அடுத்து, மாணவி யரின் எண்ணிக்கை அதிகரித்தது. 1851இல் சுமார் 150 மாணவியரோடு 3 பள்ளிகளைச் சாவித்திரிபாய் நடத்தினாலும் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தெருவில் நடக்கும்போது அவர் மீது சேற்றை அள்ளி வீசினார்கள். குப்பைகளைக் கொட்டினார்கள்.

    எதைக் கண்டும் சாவித்திரிபாய் பின்வாங்கவில்லை. தொடர்ந்து தன் செயல்களைச் செய்து கொண்டே இருந்தார். 1852இல் ஆங்கிலேய ஆட்சியில் சாவித்திரிபாய்க்குச் ‘சிறந்த ஆசிரியர்’ விருது வழங்கப்பட்டது. பெண் விடுதலை, பாலினச் சமத்துவம், தீண்டாமை எதிர்ப்பு, உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு போன்று சமூக நீதிக்காகப் போராடியது மட்டுமன்றி, கல்வியையும் வழங்கிய மகத்தான பெண்ணாகத் திகழ்கிறார் சாவித்திரிபாய்.

    இதன் விளைவாக தொடர்ந்து, 1878இல் கல்கத்தா கல்லூரி களில் முதல் முறையாகப் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, 1916இல் மும்பையில் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. விடுதலைக்குப் பின் 1947இல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்விக்கான இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 1890இல் ஜோதிராவ் இறந்தபோதும் தொடர்ந்து களத்தில் இயங்கிய சாவித்திரிபாய், 1897இல் தன் இறப்பு வரை பெண் கல்விக்காக அயராது உழைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தாகூரின் சாந்திநிகேதன் | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு

    September 5, 2025
    கல்வி

    நீங்கள் ஏன் டோட்டோசானைப் படிக்க வேண்டும்? | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு

    September 5, 2025
    கல்வி

    மாண்டிசோரி… எதை வேண்டுமானாலும் படிக்கலாம்! | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு

    September 5, 2025
    கல்வி

    செப்.5: எப்படி வந்தது ஆசிரியர் தினம்?

    September 5, 2025
    கல்வி

    தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவன தரவரிசை: சென்னை ஐஐடி தொடர்ந்து 7-வது முறையாக முதல் இடம்

    September 5, 2025
    கல்வி

    “ஆசிரியர்களை காக்க ‘டெட்’ விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு” – அமைச்சர் அன்பில் மகேஸ் நம்பிக்கை

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அயோத்தி ராமர் கோயிலில் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே வழிபாடு
    • தாகூரின் சாந்திநிகேதன் | செப்.5 – ஆசிரியர் தினம் சிறப்பு
    • செங்கோட்டையன் மூலம் பழனிசாமிக்கு பாஜக மறைமுக நெருக்கடி கொடுக்கிறது: திருமாவளவன்
    • மழையில் நாம் ஏன் காதணிகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது – இந்தியாவின் டைம்ஸ்
    • 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.