Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»ஆர்டிஇ திட்டத்தில் நிலுவை ரூ.617 கோடியை வழங்க மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
    கல்வி

    ஆர்டிஇ திட்டத்தில் நிலுவை ரூ.617 கோடியை வழங்க மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

    adminBy adminMay 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆர்டிஇ திட்டத்தில் நிலுவை ரூ.617 கோடியை வழங்க மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஆர்டிஇ திட்டத்தின் கீழ் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு வழங்க வேண்டிய நிலுவை ரூ.617 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

    இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: ‘நான் முதல்வன்’ திட்டம் மட்டுமின்றி ‘உயர்வுக்குப் படி’ திட்டம் மூலமும் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. தற்போது அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 74 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இதுதவிர தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடங்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி வருகிறோம். ‘கிராமப்புற பகுதி மாணவர்களுக்கு திறன்’ எனும் திட்டம் மூலம் இதில் மேலும் கவனம் செலுத்தப்படும். முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தை இன்னும் அதிகப்படுத்த இருக்கிறோம்.

    பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர்களை வீடுகளுக்கே தேடிச்சென்று அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பணிகளை செய்துவருகிறோம். தேர்வை எழுதாமல் போனவர்களுக்கு துணைத்தேர்வு சிறந்த வாய்ப்பாகும். அதனைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    அதேபோல், 10-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மிகவும் விரிவாக பாடத்திட்டங்கள் இடம்பெறாமல், தேவைப்படும் அளவுக்கு பாடங்களை இடம்பெறச் செய்துள்ளோம். இது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நல்ல பயனளிக்கும். மேலும், பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட கணினி சார்ந்த பாடங்களைக் கொண்டுவருவதற்கும் ஆலோசித்து வருகிறோம்.

    இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் பேருக்கு அரசு நிதியுதவியுடன் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு இதுவரை மாநில அரசுக்கு வழங்கவில்லை. அதன்படி, ரூ.617 கோடி நிலுவை இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் என்ன பதில் தருகிறார்களோ, அதற்கேற்ப ஆர்டிஇ மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு ஆண்டு தோல்வி அடைந்து மீண்டும் படித்தால் என்ன? என்று கேட்பது வருத்தமாக இருக்கிறது. நமது மாநிலத்தில் இடைநிற்றலை பூஜ்ஜியமாக மாற்றியுள்ளோம். மேலும், ஃபில்டர் செய்வது இடைநிற்றலில்தான் போய் நிற்கும். தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை விரைவில் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    பள்ளிகளில் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் ஏன்? – தமிழக பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

    July 12, 2025
    கல்வி

    குரூப் 4 தேர்வில் 11.48 லட்சம் பேர் பங்கேற்பு: வினாத்தாள் கடினமாக இருந்ததால் தேர்வர்கள் கவலை

    July 12, 2025
    கல்வி

    டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது: 4 ஆயிரம் காலியிடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி

    July 12, 2025
    கல்வி

    தலைமை ஆசிரியர்கள் 34 பேருக்கு டிஇஓ-ஆக பதவி உயர்வு

    July 12, 2025
    கல்வி

    3, 5, 8-ம் வகுப்புக்கான ஸ்லாஸ் தேர்வு மதிப்பீடு – கற்றல் நிலையை மேம்படுத்த உத்தரவு

    July 11, 2025
    கல்வி

    தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் ஜூலை 15-ல் திறப்பு!

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெஸ்ட்டில் 5 நாளுமே 90 ஓவர்களையும் முழுமையாக வீசுங்கள்: மைக்கேல் வாகன் – ENG vs IND
    • யுனெஸ்கோ அங்கீகாரம்: செஞ்சிக் கோட்டை வரலாறு என்ன? – ஒரு தெளிவுப் பார்வை
    • கொரிய வயதான எதிர்ப்பு பானங்கள்: 5 பானங்கள் வயதை தாமதப்படுத்த கொரியர்கள் உட்கொள்கிறார்கள்
    • பெண் வழக்கறிஞர் புகாரில் பழநி முருகன் கோயில் காவலாளி கைது  – நடந்தது என்ன?
    • சலுகை விலையில் ஃபேன்சி நம்பர் வழங்கும் ஜியோ: விலை எவ்வளவு தெரியுமா?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.