
கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான கருவி மட்டுமல்ல. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை. உண்மையான கல்வி வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, வாழ்க்கைக்கான நோக்கத் தையும் கற்பிக்கிறது. தரமான கல்வி மூலம் சமூகத்தின் திசையை ஆரோக்கியமான பாதையில் மாற்றி அமைக்கும் திறனை ஒருவர் பெறுகிறார்.
ஆராய்ச்சிக் கல்வி: அண்மைக் காலமாக இந்தியாவில் கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துவருகின்றன. சமூகவியல், பொருளியல், பொறியியல், மருத்துவம், இதழியல் துறை போன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து ஆராய்ந்து, இதுபோன்ற விபத்து களைத் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி கல்வி நிறுவனங்கள் திட்டங்களை வகுக்கலாம்.

