ஆண்டியப்பனூர் அணை எப்போதெல்லாம் நிரம்புகிறதோ, அப்போதெல்லாம் எங்களால் நகர் பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பாம்பாறு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ராதா (45) என்பவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உடலை சுமந்து நாங்கள் ஆற்று வெள்ளத்தை கடந்து சென்று தான் அடக்கம் செய்தோம். இப்படி, விவசாயம், கல்வி, தொழில், வர்த்தகம் என பல்வேறு தேவைகளுக்காக எங்கள் கிராமத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள திருப்பத்தூர் நகரை அடைய மழைக்காலங்களில் நாங்கள் எதிர்கொள்ளும் சவாலுக்கு அளவே இல்லை.

